
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
தமிழ் மாத ஜோதிடம்
பிப்ரவரி மாதம் 13-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 13-ம்தேதி வரை
மீன ராசி நேயர்களே!
சார்வரி வருடம் மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் லாபாதிபதி சனியோடு கூடியிருக்கின்றார். அதுமட்டுமல்ல, நீச்சபங்க ராஜயோகமும் பெற்றிருக்கின்றார். லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களும் இருக்கின்றன. எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதமிது.
கூட்டுக்கிரக சஞ்சாரம்
இம்மாதம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் குரு, சனி, புதன், சுக்ரன் ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்து கூட்டுகிரகமாகச் சஞ்சரிக்கின்றன. இதன் விளைவாக புத சுக்ர யோகமும், நீச்ச பங்க ராஜ யோகமும் ஏற்படுவதால் நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். இடம், பூமி வாங்கும் யோகமும் ஒருசிலருக்கு வாய்க்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்த செய்தி வந்துசேரலாம். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.
மகர புதனும், கும்ப புதனும்
மாதத் தொடக்கத்தில் புதன் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். பிப்ரவரி 14-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வீடு வாங்கி குடியேறும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுபச்சடங்குகள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். மார்ச் 7-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் வருகின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சியிலும் அனுகூலம் உண்டு. ெவளிநாட்டிலிருந்து உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
ரிஷப செவ்வாயின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகோதர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
மகர குருவின் சஞ்சாரம்
மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்று சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. ராசிநாதன் வலிமையிழக்கும் பொழுது உடல் ஆரோக்கியத்தில் தொல்லை ஏற்படும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது. பிப்ரவரி 21-ந் தேதி குரு அஸ்தமன நிவர்த்தியாகின்றார். அதன்பிறகு ஓரளவு நன்மை கிடைக்குமென்றாலும் நிம்மதிக் குறைவாகவே இருக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. தொழிலில் துணிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டிய நேரமிது.
கும்ப சுக்ரனின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், பிப்ரவரி 22-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு சுக்ரன் வருவது நன்மைதான். 3, 8-க்கு அதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதற்கேற்ப எதிர்பாராத திருப்பங்கள் பலவும் காண்பீர்கள். அதிகப்படியான வருமானம் வந்து மகிழ்ச்சியளிக்கும். இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 17, 18, 23, 24, மார்ச்: 5, 6, 10, 11மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். புனிதப் பயணங்கள் உண்டு. தாயின் உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை சேரும். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ஆண்டு பலன் - 2021
மீன ராசிக்கு 2021-ம் ஆண்டு நற்பலன்களை தருகின்ற ஆண்டாக இருக்கும். வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் குரு பதினோராம் இடத்தில் நிலை கொண்டு, நீச்ச பங்க நிலையில் இருப்பது சிறந்த அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இந்த வருடம் உங்களுக்கு சிறப்புகளை சேர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கூடுதலாக லாபாதிபதி சனி குருவுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் இந்த வருடத்தில் உங்களுக்கு அந்தஸ்து, கவுரவம் கூடும்படியான அமைப்புகள் இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நடக்கும். இளைய வயது காரர்களுக்கு அவரவர்கள் வயதுக்கேற்றப்படி படிப்பு, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும் வருடம் இது.
நடுத்தர வயதுக்காரர்களை இதுவரை தொல்லைப் படுத்தி கொண்டு வந்த கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள், வழக்குகள் வருடத்தின் ஆரம்பத்திலேயே சாதகமான முடிவுக்கு வரும்.
ஒரு சிறப்பு பலனாக வருடம் முழுவதும் ராகுவும் மூன்றாமிடத்தில் இருக்கிறார். உப செய ஸ்தானத்தில் சர்ப்பக்கிரகங்கள் இருப்பது எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தரும் என்பதால் உங்களுடைய பொருளாதார உயர்வு இந்த வருடம் மிகவும் நன்றாக இருக்கும்.
சனி பதினொன்றில் அமர்ந்தால் செல்வம் வரும் என்பது ஜோதிட விதி. பிறந்த ஜாதகத்திற்கும் கோட்சார அமைப்பிற்கும் இது பொருந்தும். அதன்படி இந்த வருடம் சுபத்துவ சனியின் மூலம் மறைமுகமான வழியில் உங்களுக்கு பண வரவும், தனலாபங்களும் இருக்கும்.
பதினோராமிட சனியால் இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு வெற்றிகள் இருக்கும். விரும்பிய தேசத்திற்குச் செல்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வெளி மாநிலம் மற்றும் தூரமான இடங்களில் பணி அமையும். இன்னும் சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவு இடங்களுக்கு போய் வாரா வாரம் திரும்புவது போன்ற வேலைகள் கிடைக்கும்.
சென்ற வருடம் முதல் மீனத்திற்கு கோட்சார ரீதியில் கிரக நிலைகள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் பிறப்பு ஜாதகத்தின்படி நல்ல தசாபுக்தி அமைப்பு இல்லாத மீனத்தினருக்கு சென்ற வருடம் கஷ்டங்கள்தான் இருந்து வந்தன. அதுபோன்றவர்களுக்கு கூட இந்த வருடம் நன்மைகள் இருக்கும்.
எனவே பிறக்க இருக்கும் புத்தாண்டு வாழ்க்கை, தொழில், வேலை, நட்பு, குடும்பம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களைக் கொடுக்கும். ஆரம்பத்தில் அவை கஷ்டமாகத் தோன்றினாலும் வருடத்தின் இறுதிப் பகுதியில் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்பது உங்களுக்குத் தெரிய வரும்.
எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இந்த வருடம் இருக்காது என்பது உறுதி.
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் இப்போது நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.
இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறாத முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த வருடம் திருப்தியாக அனைத்தும் நடக்கும். தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.
இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு தற்பொழுது குருபலம் வந்து விட்டதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். மீன ராசிக்காரர்கள் வீட்டில் நிச்சயமாக இந்த வருடம் ஒரு சுபகாரியம் உண்டு. இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.
முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் இரண்டாவது வாழ்க்கை நல்லவிதமாக அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.
வயதான மீன ராசிக்காரர்கள் தற்பொழுது தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இந்த வருடம் இருக்காது.
செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.
பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கப் போவது இல்லை.
குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.
இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.
நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும்.
பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். மறைமுகமான வழிகளில் லாபம் கிடைக்கும்.
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.
எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும்.
எல்லா வகையிலும் நல்ல மாறுதல்கள் இருக்கும் வருடம் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளில் சிலருக்கு வருமானம் வரும்.
அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.
இதுவரை எந்த விஷயத்தில் தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும். எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த புத்தாண்டில் தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
மீனத்திற்கு மேன்மை தரும் வருடம் இது.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
சார்வரி வருட பலன்
சார்வரி வருடத் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் குரு பகவான், லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு உச்சம்பெற்ற செவ்வாயும் இணைந்துள்ளார். செவ்வாய், சூரியன் உச்சம் பெற்றும், புதன் நீச்சம் பெற்றும், சுக்ரன் சொந்த வீட்டில் பலம் பெற்றும் இந்த ஆண்டு தொடங்குகிறது. எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும் ஆண்டாக இது அமையப்போகிறது.
ராகு-கேது பெயர்ச்சி
1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு ராகுவும், 9-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். ராகுவால், சென்ற ஆண்டில் முடிவடையாத சில காரியங்கள் பெயர்ச்சிக்குப் பிறகு துரிதமாக நடைபெறும். எடுத்த காரியத்தை துணிச்சலோடு செய்து முடித்து, எல்லாக் காரியங்களிலும் வெற்றி காணப்போகிறீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள். கேதுவால், ஞானம் விருத்தியாகும். ஆற்றல் பெருகும். தந்தை வழியில் நன்மை கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி
15.11.2020 அன்று குரு பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சி யாகி செல்கிறார். அது குருவுக்கு நீச்ச வீடு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும்போது, சில நல்ல பலன்களை அள்ளி வழங்கும். அதே நேரம் ஆரோக்கியத் தொல்லை அடிக்கடி வரலாம். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு பொற்காலம். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கள் விலகும்.
சனிப்பெயர்ச்சி
26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். எனவே லாப ஸ்தானம் பலம்பெறுகிறது. தொழிலில் லாபம் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரப்போகிறது. அரசு வழி யிலும் நன்மை கிடைக்கும். நவநாகரிகப் பொருட்களை வாங்க நினைப்பீர்கள். சகோதரர்களின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றக் கொள்கைப் பிடிப்புடன் செயல்படு வீர்கள். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு சனிக் கிழமையும் சனிபகவானை வழிபடுங்கள்.
குரு வக்ரமும், அதிசாரமும்
13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும், வக்ரமாகவும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குருவக்ர இயக்கத்தில் இருக்கின்றார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியில் குருவோடு இணைந்து சஞ் சரிக்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இதன் விளைவாக விரயங்கள் ஏற்படலாம். வீடு மாற்றங்களும், விருப்பமில்லாத இடத்திற்கு உத்தியோக மாற்றங்களும் ஏற்படும். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் மாற்றப்படும். வீண்பழிகளுக்கும் ஆளாக நேரிடும்.
வழிபாடு
சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதோடு, தென்முகக் கடவுளையும் வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
பதினோராமிடத்தில் சனி! பண வரவுதான் இனி!
மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் லாப ஸ்தானத்தில் தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் வந்து குதூகலத்தை வழங்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். சுபகாரியங்கள் மளமளவென்று நடைபெறும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
மகர ராசியில், உங்கள் ராசிநாதன் குரு பகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவானும் இணைந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தை உருவாக்குகிறார்கள். 10-க்கு அதிபதி குரு 11-ல் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். அரசியல் சார்ந்த பிரமுகர்களால் ஆதாயம் உண்டு.
லாப ஸ்தானச் சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். அந்த இடம் லாப ஸ்தானம் என்று சொல்லப்படுவதால் இதுவரை எவ்வளவு முயற்சி செய்தும் முடிவடையாத தொழில் தொடர்புகள், இப்பொழுது முடிவடைந்து பெருந்தொகை கையில் புரளும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும்.
சனியின் பார்வைப் பலன்கள்
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும், 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் நலம், குடும்பம், புகழ், ஆரோக்கியம், பூர்வ புண்ணியம், பிள்ளைகள், பூர்வீகச் சொத்துக்கள், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் விதத்தில் சனியின் பார்வை பதிவதால், அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு வந்துசேரும். குறிப்பாக சனி ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கோ உடல்நலப் பாதிப்பும், மருத்துவச் செலவும் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும்.
சனியின் பார்வை 5-ல் பதிவதால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளின் மேற்படிப்பை முன்னிட்டு நீங்கள் செய்த ஏற்பாடுகள் பலன் தரும். படித்து முடித்த பிள்ளைகள் வேலை வாய்ப்பிற்காகச் செய்த முயற்சியும் கைகூடும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளில் மட்டுமல்லாமல் பெற்றோர்களின் முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்கள் மற்றும் புதுமனை புகுவிழாக்கள் நடத்தும் யோகம் உண்டு. ‘பூர்வீக இடம் கையை விட்டுப் போய்விட்டதே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, புது இடம் சொந்த ஊரிலேயே வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை:சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, எதிரிகளின் தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். திட்டமிட்ட காரியத்தை திடீர் திடீரென மாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால் அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளில் தாமதம் ஏற்படும். ஆதரவுக்கரம் நீட்டுவதாகச் சொன்னவர்கள் விலகிக்கொள்வர். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். நீங்கள் என்ன செய்தாலும் குடும்பப் பெரியவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு.
28.12.2021 முதல் 26.1.2023 வரை:சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். கல்யாணச் சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்து மகிழ்ச்சி காண்பீர்கள். ‘வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?’ என்று சிந்திப்பீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை:செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் நல்ல மாற்றங்கள் வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் உண்டு. வீண் கவலைகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உறவினர்களின்் மனவருத்தங்கள் மாறும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ‘விருப்ப ஓய்வில் வெளிவந்து தொழிலைத் தொடங்கலாமா?’ என்று யோசிப்பர். இக்காலத்தில் சனியும் கும்பத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பதில் இருந்த தடைகள் அகலும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் உருவாகும். தொழிலில் கவனம் தேவை. குடும்பச் சுமை கூடும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ராசிநாதன் ராசியிலேயே சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். எதிரிகள் விலகுவர்.
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உன்னத நிகழ்வு இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவி உண்டு.
ராகு- கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேஷ ராகுவின் ஆதிக்க காலத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பற்றாக்குறை மாறும். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். அஷ்டமத்தில் கேது இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடலாம். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் வள்ளி-தெய்வானை உடனாய முருகன் படம் வைத்து முருகப்பெருமானுக்குரிய பதிகங்களை பாடி வழிபடுவதன் மூலம் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
பதினோராம் இடத்தில் குரு பகவான், பார்க்கும் தொழிலில் லாபம் உண்டு!
மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். லாபம் எதிர்பார்த்ததைப் போல வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களும் ஒருசிலருக்கு நிறைவேறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். உடன்பிறந்தவர்களோடு நல்லுறவு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிலிருந்தபடியே தனித்து தொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். வெளிநாட்டில் வாழும் உறவினர்கள் மூலம் அனுகூலத் தகவல் வரலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை குரு பகவான் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் பதிவதால் தைரிய ஸ்தானம் புனிதமடைகின்றது. துணிந்து சில முடிவுகளை எடுத்து உறவினர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அடகுவைத்த தங்க நகைகளை மீட்டுக்கொண்டு வருவீர் கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலன்தரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உடன்பிறப்புகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். அதன்மூலம் பாகப்பிரிவினையை சுமுகமாக முடித்துக்கொள்ள வழிபிறக்கும்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வரப்போகின்றது. சண்டை போட்ட உறவினர்கள் சமாதானம் அடைவர். நீடித்த நோய் அகலும். தாய்வழி அனுகூலமும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுக்கும் முயற்சிகள் பலன் தரும் நேரமிது.
குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். தம்பதியர்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். தொழிலில் பழைய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
நட்சத்திரப் பாதசாரப் பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். விரயங்கள் அதிகரிக்கும். முடிவிற்கு வந்த பிரச்சினைகள் கூட மீண்டும் தலைதூக்கலாம். தொழில் ரீதியாக பெரும் தொகையைக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதிரடியாக இடமாற்றங்கள் வரலாம். அருகில் இருப்பவர்களிடம் உங்கள் முன்னேற்றத்தை முன்கூட்டியே சொல்வதன் மூலம் காரியங்களில் தாமதம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் உண்டு.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சந்திரன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்து பூர்வீக சொத்துக்களை முறையாகப் பெற்றாலும், அவற்றில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவிகள் தானாக வந்துசேரும். உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறையும். உங்கள் திறமையைக் கண்டு சகப் பணியாளர்கள் வியப்பர். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். இக்காலத்தை ஒரு பொற்காலமாகக் கருதலாம். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். என்றைக்கோ மலிவு விலையில் வாங்கிப்போட்ட சொத்துக்கள் இப்பொழுது விலை உயரும். அதை விற்பனை செய்து வந்த தொகையை மேலும் முதலீடு செய்ய முன்வருவீர்கள். ஆரோக்கியம் சீராவதோடு அன்றாடப் பணிகளையும் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கலாம்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில்செவ்வாய், மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவரது பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. அப்பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். இருப்பினும் செலவுகள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். சில நேரங்களில் வீண் விரயங்களையும் சந்திப்பீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. வெளிநாட்டுத் தொடர்பால் எதிர்பார்த்த நல்ல தகவல் உண்டு. இருப்பினும் 12-ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் இனம்புரியாத கவலை மேலோங்கும். எதையும் தீர்மானமாக செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்களை திடீர், திடீரென மாற்ற நேரிடும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட தூரத்திற்கான இடமாறுதல்கள் ஒரு சிலருக்கு கிடைக்கும். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கிடைக்கும் நேரமிது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதனாக விளங்கும் குரு வக்ரம் பெறுவதால், இக்காலத்தில் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் வரலாம். உடலில் சிறு தொல்லை வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்துக் கொண்டால்தான் ஆதாயம் கிடைக்கும். குடும்ப ரகசியங்களையும், தொழில் வளர்ச்சியையும் மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். அதே நேரத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், ஒருசில நன்மைகளையும் குரு பகவான் செய்வார். பெற்றோர் வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
மீன ராசிக்காரர்களுக்கு தற்போது நான்கு, பத்தாமிடங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் மிகவும் நற்பலன்களை தரக்கூடிய மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாற இருக்கிறார்கள். இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்ல பலன்களை அடையப் போகும் ராசிகளில் மீன ராசியும் ஒன்று.
கடந்த காலங்களில் வீடு, வாகனம், உயர்கல்வி, தாயார் நலம், தன் சுகம் ஆகிய பலன்களை காட்டக் கூடிய நான்காமிடத்தில் இருள் கிரகமான ராகு அமர்ந்திருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக மேற்கண்ட விஷயங்களில் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் எதுவும் நடைபெற வில்லை.
குறிப்பாக வசதி இல்லாத வீட்டில் இருந்து வந்த நிலைமை, சொந்த வீட்டுக் கனவு இழுத்துக் கொண்டே போகுதல், தாயார் வழி விஷயங்களில் தடைகளும், தாமதங்களும், அம்மா சம்பந்தபட்ட விஷயங்களில் எதிர்மறை பலன்கள், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை, உயர்கல்வி கற்க தடை, நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறை ஆகியவை நான்காமிடத்தில் இருந்து வந்த ராகுவால் நடந்து கொண்டிருந்தன.
மேற்கண்ட சாதகமற்ற பலன்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் மாறுதல் அடைந்து அனைத்திலும் இருக்கும் தடைகள் உங்களுக்கு நீங்கும். குறிப்பாக தன்னுடைய 18 ஆண்டுகால ஒரு முழுச் சுற்றில் ராகு-கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் மட்டுமே நற்பலன்களை தருவார்கள் என்று நமது மூல நூல்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதாவது தன்னுடைய சுற்றுப் பாதையில் வெறும் நான்கரை ஆண்டு காலம் மட்டுமே ஒரு மனிதனுக்கு நன்மைகளை தரக்கூடிய விதத்தில் ராகு-கேதுக்கள் அமர்வார்கள். அதில் மிக முக்கியமான ஒரு அமைப்பு மூன்றாமிடமாகும்.
எனவே 18 ஆண்டுகளுக்கு மட்டுமே வரக் கூடிய மூன்றாமிட ராகு தற்போது மீன ராசிக்காரர்களுக்கு அமைந்திருப்பதால் இது ஒரு சிறப்பான ஒரு நற்பலன்களை தரக் கூடிய பெயர்ச்சியாகவே உங்களுக்கு இருக்கும். இன்னும் ஒரு கூடுதல் நன்மையாக தற்போது மாற இருக்கும் ரிஷப வீடு, ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடு என்பதாலும் இம்முறை மீனத்திற்கு நற்பலன்கள் நன்றாகவே இருக்கும்.
அடுத்து ஒன்பதாமிடத்திற்கு மாற இருக்கும் கேது அவர் மாறப்போகும் விருச்சிக வீடு உங்கள் ராசிநாதன் குருவிற்கு நட்பு வீடு என்பதால், சிலருக்கு ஆன்மிக எண்ணங்களை கூடுதலாக தருவார். கேது நல்ல அமைப்பில் இருக்கும் போது ஒரு மனிதனுக்கு ஆன்மிக அனுபவங்கள் தூக்கலாக இருக்கும் எனும் விதிப்படி. தற்போது மாற இருக்கும் கேதுவின் அமைப்பினால் உங்களுக்கு நல்ல ஆன்மிக அனுபங்கள் ஏற்படும்.
பாக்கிய ஸ்தானத்திற்கு வரப் போகும் கேதுவால் இதுவரை கிடைக்காத சில பாக்கியங்கள் உங்களுக்கு இப்போது கிடைக்கும். அவரவர்களின் வயதிற்கேற்ப அந்த வயதிற்குரிய நல்ல அமைப்புகள் இப்போது நிறைவேறும். எதுவும் கிடைக்க இருந்து வந்த தடைகள் விலகும்.
ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் நடக்கப் போகும் குருப் பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதன் குரு லாபஸ்தானத்திற்கு மாற இருக்கும் நிலையில் ராகு-கேதுக்கள் முயற்சி மற்றும் தைரிய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் வருவது உங்களுக்கு சாதகமான அமைப்பு.
இதன் மூலம் உங்களுடைய சிந்தனை தெளிவாகும். திட்டமிடல் நன்றாக இருக்கும். எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்கமுடன் யோசித்து சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எனவே எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி’
ராகு, கேது பெயர்ச்சியும், குருப் பெயர்ச்சியும்தான் உங்களை சந்தோஷப்படுத்தப் போகிறது என்றால் ஏற்கனவே கோட்சாரத்தில் முக்கிய கிரகமான சனி லாப ஸ்தானம் எனப்படும் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் இன்னும் மூன்று வருடங்களுக்கு கோட்சார ரீதியில் மீனத்திற்கு மிகுந்த சாதகமான பலன்கள் நடக்க இருக்கின்றன.
அதேநேரத்தில் கோட்சார பலன்கள் என்பவை பொதுவானவைதான். ஒரு மனிதனுக்கு நடக்க இருக்கும் நல்ல கெட்ட சம்பவங்களையும், நன்மை தீமைகளையும் உறுதியாகச் சொல்பவை அவனது பிறந்த ஜாதக அமைப்புப்படி நடக்க இருக்கும் தசாபுக்தி அமைப்புகள்தான். தசாபுக்தி பலன்களும், இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் கோட்சார பலன்களும் சரியான விதத்தில் நன்மையாக ஒன்று சேரும் போது ஒரு மனிதன் சந்தோஷ வாழ்வின் உச்சத்திற்கு செல்ல முடியும்.
பரிகாரங்கள்:
வேலூர் வாலாஜாபேட்டையில் மகான் கயிலை ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமிகளால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகு கேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். மேலும் அன்னை மீனாட்சியின் தவப்புதல்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசியுங்கள். அனைத்து பிரச்னைகளும் பஞ்சாய் பறந்து போகும்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)