
இன்றைய ராசி பலன்கள்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவை தட்டும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு.
வார பலன்கள்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெற்ற ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி குருவுடன் சேர்க்கை பெற்றதால் செலவுகள் அதிகரிக்கும். கையிருப்புகள் கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். சிலர் அலுவலகத்தில் வீடு, மனை, வாகனத்திற்காக கடன் பெறலாம். தம்பதிகளிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த செயலுக்கு சாதகமான பலன் உண்டு. திருமணப் பேச்சுவார்த்தைகள் நடக்கும். 7-ல் ராகு இருப்பதால் சிலரின் திருமண முயற்சிகள் சற்று இழு பறிக்குப் பிறகு சாதகமாகும். மருமகன் தன் தவறை உணர்வார்.
பணியாளர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். 9-ம் அதிபதி புதன் 8-ல் வக்ரம் பெற்றதால் முதியோர் இல்லத்திற்குச் சென்ற தந்தை இல்லம் திரும்புவார். சிலர் புதிதாக சொந்த தொழில் துவங்க வாய்ப்புள்ளது. பெண்கள் விடுமுறைக்கு தாய் வீடு செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆண்கள் பெண்கள் விசயத்தில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரும் வாய்ப்புள்ளது. தினமும் ஸ்ரீ லட்சுமி குபேர மந்திரம் கேட்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
அன்பாகப் பேசி அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் துலாம் ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ‘விபரீத ராஜயோகம்’ அடிப்படையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்திற்கு செல்லும்பொழுது சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மருத்துவம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மகத்தான பலன் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் இருக்கும் சனி பார்க்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், தன -சப்தமாதிபதி செவ்வாயைப் பார்க்கும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாகும் பொழுது வாகன யோகம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். சுப காரியம் நடை பெறுவதற்கான அறிகுறி தென்படும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. சுகக்கேடு அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். இதுபோன்ற காலங்களில் முறையான வழிபாடு அவசியம். வீண் விரயங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி நிலவும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
இம்மாதம் பட்டாபிஷேக ராமர் படத்தை இல்லத்தில் வைத்து வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, ஜூன்: 1, 2, 6, 7, 12, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்வது நல்லது. அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் பலன் தரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். பிள்ளைகளின் திருமணப் பேச்சு முடிவாகலாம். எதிர்பார்த்த சம்பள உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் கவனம் தேவை.
ஆண்டு பலன் - 2022
பிறரை எளிதில் வசீகரிக்கும் ஆற்றல் நிறைந்த துலா ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த் துக்கள். இந்த ஆண்டில் பல வளமான பலன்கள் கிடைக்க உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் தேடி வரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். இந்த ஆண்டில் குரு மற்றும் ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சுமாராகவே உள்ளது.
4--ல் சுகாதிபதி சனி ஆட்சி பலம் பெற்றதால் இந்த ஆண்டு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். மன உளைச்சல் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை திட்டமிட்டு முறையாக பயன்படுத்தினால் இந்த புத்தாண்டு பொற்காலமாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இனி புத்தாண்டு பலன்களை விரிவாகக் காணலாம்.
குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 13, 2022 வரை குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக நாட்டம் மிகுதியாகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும்.சாஸ்த்திர ஞானம் அதிகரிக்கும். ஜோதிடம் கற்கும் ஆர்வம் வரும்.
சமுதாய அந்தஸ்த்தை உயர்த்தக் கூடிய சங்கங்க ளில் முக்கிய நிர்வாகப் பதவிகள் தேடி வரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். கைவிட்டுப் போன பூர்வீகச் சொத்து திரும்பி வரும். புனித ஸ்தலங்களுக்கு சென்று புனித நீராடுவார்கள். காசி ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை செல்வார்கள். எப்பொழுதும் யாருக்காவது ஏதேனும் உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். வலது பக்க வீட்டுக்காரரின் தொல்லை குறையும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். தந்தை வழி பூர்வீகச் சொத்து சில மனஸ்தாபங்களுக்கு பின் கிடைக்கும்.
ஏப்ரல் 2022-ல் குரு பெயர்ச்சி யாகி 6ம் இடமாகிய மீனத்தில் ஆட்சி பலம் பெற்றப்பிறகு கடன், நோய் எதிரி தொல்லை மிகும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். எந்த செயலிலும் முடிவு எடுக்க முடியாமல் தடை, தாமதம், தடுமாற்றம், மன சஞ்சலம், மனக் குழப்பம் உண்டாகும்.
வெளிநாட்டவர் தொடர்பு ஏற்படும். கடன் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பாக எதிர்பாராத வம்பு, வழக்கு உருவாகும். சிலருக்கு கண் திருஷ்டி, எதிரி தொல்லை உண்டாகும். வீட்டில் வயது முதிர்ந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கும். இளைய சகோதர வழியில் சில ஆதாயங்கள் கிடைக்கப் பெற்றாலும் அவரால் சில மன உளைச்சலும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். முன்னோர் வழி சொத்தின் பங்கீடுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு ஏற்படலாம். சிலருக்கு சொத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் 4--ல் ஆட்சி பலம் பெறுவதால் தொழில் வேலை போன்ற ஜீவன அமைப்புகள் வலிமை பெறும். வாடகை வீட்டிலிருந்தவர்கள் கடன்பட்டாவது சொந்த வீடுகட்டுவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிப்பது, புதிய வாகனம் வாங்குவது என சொத்து தொடர்பான வேலைகள் செய்ய ஏற்ற நேரம். தாய்வழி பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும். விற்ற பணத்தில் தாயார் சகோதரருக்கு அதிக பங்கு கொடுப்பது மன உளைச்சலை அதிகமாக்கும். தாயாருக்கு ஆரோக்கிய குறைபாடு சீராகும்.
சிலருக்கு உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக தாயாரை பிரிந்து செல்ல நேரும். சொத்து வாங்குதல், விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. சிலருக்கு நாய், பூனை, பறவைகள், மீன் என வீட்டு விலங்கு வளர்ப்பில் நாட்டம் உண்டாகும்.
26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை 2, 7-ம் அதிபதியான செவ்வாய் 4, 5-ம் அதிபதியான சனி பகவானுடன் 4ம் இடத்தில் இணைகிறார்கள். சனி செவ்வாய் பகை கிரகங்கள் என்பதால் தன வரவில் தடை தாமதம் இருக்கும். குடும்ப உறவுகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பேச்சால் குடும்பம் பிரியும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். தெளிந்த நீரோடையாக இருக்கும் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
கணவன், மனைவி கருத்து வேறுபாடு, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கு மன வேதனை தரும் விதத்தில் இருக்கும் என்பதால் விட்டுக் கொடுத்து வாழப் பழகவும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். சிலருக்கு வீடு, வாகன விற்பனையால் வில்லங்கம் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் தாயை யார் பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசி களுடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். மிகுதியான விரக்தியால் சிலர் தர்ம சிந்தனையை ஒதுக்கி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவார்கள். கலைத் துறையைச் சேர்த்த பெண்களுக்கு வாய்ப்புகள் தடைபடும் அல்லது சம்பளம் கிடைக்க கால தாமதம் உண்டாகும்.
துலா ராசி ஆண்கள் காதலால் அசிங்கப்படுவர். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். சிலர் குல ஆச்சாரங்கள் மற்றும் விரத நெறிமுறைகளை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவும்.
ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உண்டாகும். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும்போது நன்மை செய்யுமென்பது ஜோதிட விதி. அதாவது ‘கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம்‘. வாரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும்.
கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் ‘மெமோ’ வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. தடைப்பட்ட வாடகை வருமானம் மீண்டும் வரத் துவங்கும். ஒரு சிலருக்கு 2-வது திருமணம் நடைபெறும்.
ஏப்ரல் 12-ல் ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் மாறுகிறார்கள். ராசியில் உள்ள கேது உங்களின் செயல்பாடுகள் எண்ணங்களை சுத்தப்படுத்துவார். புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லௌகீக இன்பங்க ளில் ஆர்வம் குறையும். ஆடம்பரத்தில் வாழ்க்கை மனம் வெறுக்கும். ஆனால் ஏழாமிட ராகுவால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் உண்டாகும். தொழில் பங்குதாரர், கூட்டாளிகளை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டிய நேரம். பரம்பரை கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம்
அல்லது பரம்பரைக் கூட்டுத் தொழில் நிர்வாக கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்து பழியை உங்கள் மேல் திசை திருப்பலாம். தொழில் ஞானம் உழைக்கும் ஆர்வம் நிறைந்த நல்ல பங்குதாரரிடம் பகைமை உண்டாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியான ஒரு புதிய கூட்டாளியை இணைவார். ஆருயிர் நண்பர்களுடன் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரின் குறுக்கீடு இருக்கும்.
திருமணம்: கோட்சார ராகு/கேதுக்களால் சர்ப்ப தோஷ தாக்கம் உள்ளது. ஜனன கால ஜாதக ரீதியாக குரு தசை நடப்பவர்களைத் தவிர பிறருக்கு கோட்சார ராகு/கேதுக்களால் திருமணம் தடைபடாது.
மேலும் ராசிக்கு நான்கில் உள்ள சனியின் பத்தாம் பார்வை ராசிக்கு இருப்பதால் வரன் குறித்த தெளிவான முடிவு எடுக்க முடியாமல் நீங்களே நிறைய சிந்தித்து உங்களை குழப்பிக் கொள்வீர்கள். எது எப்படி இருந்தாலும் கோட்சார குரு கும்பத்தில் நிற்பதால் வரன் பற்றிய தெளிவான முடிவு எடுப்பீர்கள்.
பெண்கள்: ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 2-ல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கும். அதை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும். கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். கணவருக்கு ஆரோக்கிய குறைபாடு இருந்தால் சரியாகும். கணவன், மனைவி உறவு மகிழ்வைத் தரும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர் பார்த்தபடி இருந் தாலும் விரும்பிய விலை படியாது. இந்த ஆண்டு விளைச்சலுக்கு போதிய மழை பெய்யும். பயிர்களை காப்பீடு செய்வதால் அரசின் ஆதாயம் பெற முடியும். விவசாயத்திற்குத் தேவையான தளவா டங்கள் வாங்கலாம். குத்தகைப் பணம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.
முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் ஆர்டர்கள் கிடைக்கும். தொழிற்சாலைகள்,சுய தொழில் நடத்துபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.தொழிலுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் மனம் தளரக்கூடாது.தொழில் சிறப்பாக நடக்கும்.வருமானம் வந்து கொண்டே இருக்கும்.கூட்டம் கூடும் ஆனால் கல்லா களைகட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும் கையில் பணம் தங்காது.
அரசியல்வாதிகள்: தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும்.உங்கள் கனவுகள் நிறைவேறும் ஆனந்தமான நேரம். மக்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கும்.உங்களுக்கு தொல்லை கொடுத்த எதிர் கட்சியினர் விலகிச் செல்வார்கள்.வெளி உலகத்திற்கும்,கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும்.
மாணவர்கள்: கல்வியில் தடைகள் தகரும்.அரியர்ஸ் பாடங்களை எழுதி பாஸ் பண்ண ஏற்ற நேரம். அரசு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் நாட்டின் சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தாமல் நன்றாக படித்து தேர்வுக்கு தயராகுங்கள்.சரியாக படிப்பு வரவில்லை என்றால் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.
சித்திரை 3, 4-ம்பாதம்: பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம்.
உஷ்ணநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்யநேரும். மன சஞ்சலத்தை தவிர்க்க 27 வாரம் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.
சுவாதி: வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டாகும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். இடர்களை தவிர்க்க ஞாயிறு மாலை 4.30- 6 மணி வரையான ராகு வேளையில் 9 நெய் தீபம் ஏற்றி சிவ வழி பாடு செய்யவும்.
விசாகம் 1,2,3ம் பாதங்கள்: சொத்து வாங்கும் விற்கும் முயற்சியில் அதிக கவனம் தேவை.
கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு, தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் , விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும்.செவ்வாய்கிழமை வாராஹி அம்மனை வழிபட தொந்தரவுகள் அகலும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சுபகிருது வருட பலன்
ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிகுந்த துலா ராசியினருக்கு தமிழ் புத்தாண்டில் சுப பலன்கள் அதிகரிக்க நல் வாழ்த்துக்கள்.
ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 6ம் இடத்திலும் சனி பகவான் 4, 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்கள். ராசியில் உள்ள கேதுவால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். 7ல்ராகு நிற்பதால் வெகு சிலருக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். நட்பு வட்டாரங்களால் மன சங்கடம் உருவாகும்.
ஆறாம் அதிபதியாகிய குரு மறைவு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. சில வளர்ச்சிகள் தடைபடலாம். ஆனால் குரு பார்வை பட்ட இடத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. 4ம்மிட சனி பகவானால் சுக போக பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
குடும்பம்:இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அனுசரித்துச் செல்வார்கள். மன நிம்மதி இருக்கும். வீட்டில் எல்லோரும் எப்போதும்சந்தோசமாக இருப்பார்கள்.குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்தசொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும்.தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. 3,6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும்.
ஆரோக்கியம்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரும்.ஞாபக சக்தி குறையும். மறதி ஏற்படலாம்.
மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம்.
திருமணம்:துலாம் ராசியினருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணமே வேண்டாம் என்றவர்கள் கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். 7ல் உள்ளராகு சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி இருப்பதால் சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். சிலருக்கு ராகு மேஷத்தை கடக்கும் முன்பு ஒன்றுக்குமேற்பட்ட திருமணம் நடக்கும்.
பெண்கள்:ஜனன கால ஜாதகப்படி தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு ராகு/கேதுக்களால் சிறு சிறு உடல் பாதிப்பு மனசஞ்சலம் இருக்கும். மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் தொடர்ந்து சுபநிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வருகையில் குதுகலம் நிரம்பியிருக்கும். தாய் வழிப்பாட்டியின் நகைகள், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு வலுவாக இருக்கும்.
மாணவர்கள்:லக்னத்தில் உள்ள கேது கற்றல் ஞானத்தை மிகைப்படுத்துவார். உழைப்பிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். சில மாணவர்களுக்கு வேற்று மொழி கற்கும் வாய்ப்பும் ஆர்வமும் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் போட்டித் தேர்வில் பெற்றி பெற்று பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்:அரசு உழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இட மாற்றத்துடன் ஊதிய உயர்வும் கிடைக்கும்.தனியார் துறையினர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறலாம். 6ல் குரு ஆட்சி பலம் பெறுவதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்:தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். பல புதிய தொழில் அதிபர்கள் உருவாகுவார்கள். சில உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களுக்கு டிரேட் மார்க் வாங்குவார்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:ஏழில் உள்ள ராகு பொது ஜனத் தொடர்பை அதிகப்படுத்தும். மக்களுடன் மக்களாக கலந்து சேவை செய்வீர்கள். அரசியல்வாதி களுக்கு மிகப் பொன்னான காலம்.6ல் குரு ஆட்சிபெறும் காலத்தில் எதிரிகள் விலகுவார்கள். உங்களின் புகழ் பரவும். யாரும் உங்களை அசைக்க முடியாது.
கலைஞர்கள்:சுக்ரனை ராசி அதிபதியாகக் கொண்ட கலைத்துறையினர் சாதனை படைப்பீர்கள். புதிய படைப்புகள் உலகப் புகழ் பெறும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் கடன் வாங்கி படம் எடுப்பதை தவிர்க்கவும். கலைத்துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்.
விவசாயிகள்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். கடன் வாங்கி வயல் தோட்டம் வாங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பால் தரமான பொருட்களை விளைவிப்பீர்கள்.உங்களின் உழைப்பிற்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். உங்கள் விலை பொருட்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கும்.
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள்.சில தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சனை ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும்.சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும்.
குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் சஞ்சரிக்கும்சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில்தாய் வழி உறவுகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல்போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்:வெள்ளிக்கிழமை காலை 6 --7 சுக்ர ஓரையில் மல்லிகை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும்
6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் விரும்பிய கடன் தொகை எளிதில் கிடைக்கும்.ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
நான்காமிடத்தில் சனி, நல்ல விரயங்கள் இனி!
துலா ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று நான்காமிடத்திற்கு செல்கின்றார். இதை ‘அர்த்தாஷ்டமச்சனி’ என்று சொல்வது வழக்கம். அஷ்டமத்துச் சனி நடைபெறும் பொழுது, ஏற்படும் கெடுபலன்களில் சரிபாதி அளவு இக்காலத்தில் உருவாகும் என்பர். ஆனால் உங்கள் ராசிக்கான அதிபதி சுக்ரன், சனி பகவானுக்கு நட்பு கிரகமாவார். எனவே பெரிய அளவில் கெடுபலன்களைக் கொடுக்கமாட்டார். மேலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், சுக ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப் போவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது. எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். சுகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.
தேவைக்கேற்ற பணம் வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப்போகின்றார். இது தாய், சுகம், கல்வி விருத்தி, வீடு, இடம், வாகனம் போன்றவற்றைக் குறிப்பதாகும். அந்த இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி பகவான் நல்ல பலன்களை வழங்குவார். மகர ராசி அவருக்கு சொந்த வீடாகும். ஆயுள்காரகன் என்று சனியை வர்ணிப்பதால், உங்களுக்கும், உங்கள் தாய்க்கும், உடன்பிறப்புகளுக்கும், உடன் இருப்பவர்களுக்கும் உடல்நிலையில் சிறுசிறு தொல்லைகள் வந்து விலகும். பொருளாதாரத்தில் தேவைக்கேற்ற பணம் வரும். எதிலும் கூட்டு முயற்சி உகந்தது. கல்வி, கட்டிடப்பணி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடிவரும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும் 6, 10 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் ஆரோக்கியம், செயல்திறன், கவுரவம், எதிர்ப்பு, வியாதி, கடன் சுமை, மனக்குழப்பம், பங்காளிப் பகை, தைரியம், தொழில், ஜீவனம், அரசுப்பணி, வணிகம், போன்றவற்றை எடுத்துரைக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால், அதற்கு ஏற்ப பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக உங்கள் ராசியைச் சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனம் தேவை. அலைச்சலை குறைத்துக்கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்கள் வந்து அலைமோதும். இருப்பினும் சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகம் என்பதால் கடைசியில் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். ‘உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே’ என்று ஒருசிலர், உத்தியோக மாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்று வெளிவந்து கூட்டுமுயற்சியில் சுயதொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். கூட்டாளிகள் ஜாதகத்தில் சஷ்டாஷ்டம தோஷம் இல்லாமல் இருப்பதை கவனித்துக் கொள்வது நல்லது.
சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால் தொழில் ஸ்தானம் புனிதமடைகின்றது. பழைய தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சூரியன் உங்களுக்கு லாபாதிபதியாகவும் விளங்குவதால் தொழில் சீராகவும், சிறப்பாகவும் நடைபெறும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் மிகவிரைவில் முடியும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால், குடும்ப ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். ‘வீடு கட்டி வைத்தும் வாடகைக்கு ஆள் வரவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் வரப்போகின்றது. இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்கு வருகின்றார். பஞ்சம ஸ்தானம் புனிதமடைவதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடை பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவி எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 5-ம் இடத்திற்கு குரு வருகின்றார். அப்பொழுது குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘ஆறில் குரு ஊரில் பகை’ என்பதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும். குருவின் நேரடிப்பார்வை பதிவதால் தொட்டது துலங்கும், தொல்லைகள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சப்தம ராகுவின் ஆதிக்கத்தால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைந்த ராகுவால் நிறைந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், சலுகைகளும் கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக அனுமன் படம் வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. ராமதூதன் வழிபாடு சேமிப்பை உயர்த்தும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
எதிரிகள் விலகுவார்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். உற்றார், உறவினர்கள் அல்லது தொழில், உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் பாகப் பிரிவினையில் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும். பத்திரப் பதிவு காலதாமதமாகலாம். இந்த பிரச்சனையில் தாயின் ஆதரவு உடன் பிறந்தவர்களுக்கு இருக்கும், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். சிலர் உடன் பிறந்தவர்களின் கடனுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். முக்கிய தேவைகளுக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறாமல் அரசுடைமை , அரசு அங்கீகாரம் பெற்ற வங்களில் கடன் பெறுவது சிறப்பு.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை மிகுதியாக இருக்கும். குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். சக ஊழியர்களுடன் மனக் கசப்பு உருவாகும். சிலருக்கு விருப்பம் இல்லாத ஊருக்கு வேலை மாற்றலாகும். அரசு ஊழியர்கள் இந்த ஓராண்டு காலம்கொடுக்கப்பட்ட வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முதலாளிகளுக்கு புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் விலகலாம். 7ல் ராகு இருப்பதால் நல்ல தொழில் திறமையும், அனுபவமும் நிறைந்த நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் விலகலாம். வெளிப்பார்வைக்கு அனுபவம்மிகுந்தவர் போலவும் தொழில் தந்திரம் தெரியாத புதிய கூட்டாளியுடன் நட்பு ஏற்படலாம்.
யாரையும் நம்பி பணம் சம்பந்தபட்ட விஷயங்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. தன விரயம் மிகுதியாக இருக்கும் என்பதால் எந்த விசயத்தையும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத அறிமுகமில்லாத நபர்களுக்கு கடன் கொடுப்பதையும், கடன் பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.அமைதியாக நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டால் இந்த ஒரு வருட காலத்தை எளிதில் கடக்க முடியும். சிலர் உயில் எழுதலாம் அல்லது எழுதிய உயிலில் திருத்தம் செய்யலாம். 6ல் குரு ஊரில் பகை என்ற பழமொழி இருந்தாலும் குருவின்பார்வையால் தொழில் ஸ்தானம் , விரய ஸ்தானம் . தன ஸ்தானம் பலம் பெறும். அபரிமிதமான சுப பலன்கள் உண்டு.
குருவின் 5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான கர்ம ஸ்தானத்தில் பதிகிறது. வாரிசு இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். 10ம்மிடம் தொழில் ஸ்தானம் என்பதால் ஏற்கனவே வியாபாரத்தில் உள்ளவர்கள் தொழிலை விரிவு செய்ய புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். அதற்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும்.பரம்பரை குலத்தொழில் செய்பவர்கள் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். தீட்டிய திட்டம் வெற்றி பெற திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டியாளர்கள் விலகுவார்கள். புதிய பாதை புலப்படும்.
17.1.2023 வரை ராசி, 6, 10ம் இடத்திற்கு சனிப் பார்வை உள்ளது. ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் உள்ளார் பல புதிய தொழில் ஆர்வலர்கள் உருவாகுவார்கள். நன்கு பரிட்சயமான தொழிலை மட்டும்செய்யவும். புதியதடாலடியான முடிவுகள் எடுக்க கூடாது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை இழந்தவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் சந்தர்ப்பம் உண்டாகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலர் அதிக சம்பளத்திற்கு புதிய வேலையில் சேரலாம். சிலருக்கு ஓய்வு பெற்ற தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும்.
குருவின் 7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிவதால் சிலர் வாழ்நாள் முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு வெளிநாட்டிற்கு செல்லலாம். சிலர் ஒர்க் பிரம் ஹோமில் வெளிநாட்டு வேலை செய்யலாம். தம்பதிகள் உத்தியோகத்திற்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லலாம். எதிலும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம்.நம்பியவர்களே எதிரியாக, துரோகியாக மாறும் வாய்ப்பு உள்ளதால் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முயற்சிகள் கால தாமதமாக பலிதமாகும்.சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்பு அல்லது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை புதிப்பிக்கலாம். சிலருக்கு நின்று போன வீடு கட்டும் பணி தொடரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். சிலர் கண் அல்லது மூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம்.
சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் வீட்டிற்கு சென்று வரலாம். சிலர் பக்தி முத்தி ஆன்மீக தொண்டு, சேவை செய்யலாம். சிலர்கேதார்நாத், பத்ரிநாத் என ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். சிலர் துக்கம் தாளாமல் சந்நியாசியாகலாம். சிலர் கடனுக்காக தலை மறைவாகலாம். எது எப்படி இருந்தாலும் நிம்மதியான தூக்கம் வரும்.
குருவின் 9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் எவ்வளவு இழுபறியான நிலை இருந்தால் கூட குடும்ப உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். இதுவரை எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தந்தை, தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய், தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உற்றார், உறவுகள் சுப விசேஷங்கள் என குதூகலம் நிரம்பி இருக்கும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் பகை மறப்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகள் சம்பாத்தியத்தால் தலை நிமிரும்.சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டு ஆன்லைனில் இன்னொரு வருமானம் ஈட்டலாம்.இல்லை என்ற நிலை இருக்காது.புதிய உறவுகளான மருமகள், மருமகன் கிடைக்கப் பெறுவீர்கள்.
குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை
குரு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நிறைந்த தன லாபம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு விரும்பிய ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். எப்பொழுதோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். இட விற்பனையில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். அரை குறையாக நின்ற பணிகள் துரிதமாகும். எதிர் காலம் பற்றிய கவலைகள் அகலும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறு சுமுகமாகும்.
பெண்கள்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். பற்றாக்குறை பட்ஜெட்டை உபரி பட்ஜெட்டாக மாறும்படி குடும்பத்தை நிர்வகிப்பீர்கள்.பணிபுரியும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சக்ரத் தாழ்வாரை வழிபட கடன், எதிரி தொல்லை குறையும். நோய்கள் அண் டாது.வெள்ளிக்கிழமை குத்து விளக்கு ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படிக்க பொருள் வரவு அதிகமாகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
ஏழில் ராகு/ ஜென்ம கேது
சுக்ரனின் ஆசி பெற்ற துலாம் ராசியினரே ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 6ம் இடத்திலும் சனி பகவான் 4, 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்கள்.
ஏழாமிட ராகுவின் பொதுபலன்கள்:ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். கடுமையான தோஷத்தால் திருமணம் தடைபட்டவர்களுக்கு கூட ராகு ஏதாவது கோல்மால் பண்ணி திருமணத்தை நடத்தி விடுவார். சில தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சனை ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும்.
சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும். சில வியாபாரிகள் தந்திரமாக இலவச ஆபர் கொடுத்து வாடிக்கையாளர்களை வசப்படுத்துவார்கள்.
ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை துலாத்திற்கு லாபாதிபதி. வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.
தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும்.நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள்.
பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. ஆனால் நியமான முறையில் லாபம் வருகிறதா? என்று மட்டும் கேட்கக் கூடாது. ராகுவிற்கு பிடிக்காத இரண்டு வார்த்தைகள் நியாயம், தர்மம். பிடித்த ஒரே வார்த்தை அதர்மம். உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும். இப்படி ராகுவின் செயல்பாடுகள் வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் துலாத்திற்கு ராசி அதிபதி மற்றும் எட்டாம் அதிபதி என்பதனால் உங்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். நீங்கள் பிறரின் நலத்திற்காக செய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்தால் அலைக்கழிகப்பட்டு மன வேதனை அடைந்தவர்களுக்கும் வழக்கு உங்களுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்படும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:அசுவினி கேதுவின் நட்சத்திரம். ராசியில் பயணிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம். ஆத்மஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும்.
ஜனனகால ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் பலமிழந்தவர்களுக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகி இறையுடன் மனம் ஒன்றாது. சாமியை கும்பிட்டு பெரிதாக என்ன சாதித்தோம்; சாமியே கிடையாது’ என்ற விரக்தி ஏற்படும்.
ஜென்ம கேதுவின் பொது பலன்கள்:கேது ஒரு ஆன்மீக கிரகம்.பல ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் உருவாகக் காரணமாக இருக்கும் கிரகமாகும். ஆழ் மனதில் ஏதாவது ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும். உங்ளின் செயல்பாடுகள், எண்ணங்களைச் சுத்தப்படுத்தி கேது பகவான் உங்களை பரிசுத்தமானவராக மாற்றுவார். சிலர் மதப்பற்று அதிகமாகும். சிலர் தாடி வளர்த்துக் கொண்டு சந்நியாசி போல் வாழ்வார்கள். சில பெண்கள் உத்திராட்சம் அணிந்து கொண்டு இல்லற சந்தியாசியாக ஆச்சாரத்தை கடைபிடிப்பார்கள்.
வெகு சிலர் போலிச் சாமியாராக உருவெடுப்பார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களில் இணைந்து ஆன்மீகப் பணியாற்றுவார்ர்கள். பணம் செல்வாக்கை விரும்பாத கிரகம் கேது என்பதால் பணம், செல்வாக்கு இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாதவராக மாறிவிடுவார்கள்.
பேராசைபடுவர்களை தீராப் பகை, மீளாக் கடன், தீராத வியதி, மாளாத பிரச்சனைகளில் ஜென்ம கோட்சார கேது சிக்க வைப்பார்.சட்டத்தை மதித்து நியாயமான எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அங்கீகாரம், பணம், அந்தஸ்து அனைத்தையும் கொடுத்து கௌவரவிப்பார். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்: விசாகம் குருவின் நட்சத்திரம். குரு துலாத்திற்கு 3,6ம் அதிபதி. கோட்சாரத்தில் 3 , 6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் உடன்பிறந்தவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்: சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் காலத்தில் மந்தத்தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். லக்னத்தில் நிற்கும் கேது பலவிதமான தொழில் ஞானத்தை வழங்குவார். ஏழாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுப்பார். அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். அதிர்ஷ்டத்தைத் தேடி லாபத்தை இழக்கநேரும். சிலரின் பூர்வீகச் சொத்து கை நழுவிப் போகும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்: சித்திரை செவ்வாயின் நட்சத்திரம் செவ்வாய் துலாத்திற்கு 2,7ம் அதிபதி.சந்தோசமாக வாழும் தம்பதிகளுக்கு பிறரின் குறுக்கீட்டால் சங்கடங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே பிரிந்து வாழும் தம்பதியினர் மூன்றாம் நபரின் அறிவுரையால் சேர்ந்து வாழத்துவங்குவார்கள். பார்த்தீர்களா கேதுவின் செயல்கள் எப்படி விந்தையாக இருக்கிறது. தொழில் ஞானம், உழைக்கும் ஆர்வம் நிறைந்த பழைய கூட்டாளியை கழட்டி விடுவார்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியான ஒரு புதிய தொழில் கூட்டாளியை உங்களுடன் கோர்த்து விடுவார். என்ன ஒரு வில்லத்தனம் ? ஒரு சிலருக்கு வேற்று மொழி கற்பதில் ஆர்வம் பிறக்கும். வலது கண் தொடர்பான சிகிச்சைக்கு ஏற்ற காலம்.
ஆக இந்த ராகு, கேது பெயர்ச்சியில் சில மன சங்கடங்கள் இருந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்பதை உறுதியாக கூறலாம். ஆட்சி பலம் பெறும் சனியும், குருவும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கிறார் என்பதால் இறைவழிபாடு உங்களை கவசமாக காக்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406