
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
18.4.22 முதல் 24.4.22 வரை
துக்கம் அகலும் வாரம்.12-ம் இடமான அயன சயன போக ஸ்தானத் திற்கு குருப் பார்வை இருப் பதால் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் ஆர்வம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஆடம்பர பொருட்களில் ஆர்வம் மற்றும் சேர்க்கை அதிகரிக்கும். குழந்தை பேறு முயற்சி பலன் தரும். பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். ராசி அதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து நிற்பதால் தந்தை வழி உறவுகளுடன் சிறு விரிசல் உண்டாகலாம்.புதிய முடிவுகளை எடுக் கும் முன்பு பெரியோர்களின் ஆலோச னைகளை கேட்கவும்.
3-ல் கேது இருப்பதால் இடமாற்றம், வீடுமாற்றம் பதவி மாற்றம் வரும். ஆரோக்கிய குறைவால் விடுப்பில் இருந்த அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு செல்வார்கள். ஆரோக்கிய தொல்லை அகலும். மருத்துவ செலவு குறையும். 10-ம் இடத்திற்கு பாக்கிய அதி பதி செவ்வாயின் 4-ம்பார்வை இருப்பதால் தொழில் விறுவிறுப்பாக நடைபெறும். கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2022 முதல் 14-05-2022 வரை
வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்பட்டு வெற்றி காணும் சிம்ம ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம்பெற்றிருக்கின்றார். தொழில் ஸ்தானாதிபதி சுக்ரனும், யோகம் செய்யும் கிரகமான செவ்வாயும் உங்கள் ராசியைப் பார்க்கின்றனர். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
மீன - சுக்ரன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு மாதப்பிறப்புக்கு முன்தினம் பெயர்ச்சியாகும் குருவோடு இணைகிறார். மீன ராசி, சுக்ரனுக்கு உச்ச வீடு. அசுர குரு உச்சம் பெற்று, தேவ குருவின் சொந்த வீட்டில் அவரோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது நல்ல திருப்பங்கள் வந்துசேரும். தடைபட்டு வந்த காரியங்கள் நடைபெறும். மிதமிஞ்சிய பொருளாதாரம் கிடைக்கப்போகிறது.
ரிஷப- புதன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு 10-ம் இடமான ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். தன - லாபாதிபதியான புதன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். தடைகற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். வெளிநாட்டில் பணிபுரியும் நண்பர்கள், உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.
புதன் வக்ர இயக்கம்
சித்திரை 17-ந் தேதி, ரிஷபத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒற்றுமை குறைய வாய்ப்பு அதிகம். எனவே உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களிடம் குடும்பப் பிரச்சினைகளை பற்றி பேசி, விமர்சனம் செய்யவேண்டாம். வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படாமல் இருக்க தெய்வ வழிபாடுகள்தான் கைகொடுக்கும்.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 21-ந் தேதி, மேஷ ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் பின்னோக்கி வருகிறார். அங்கு, உச்சம் பெற்ற சூரியனோடு இணைந்து ‘புத ஆதித்ய யோக’த்தை உருவாக்குகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும் சொந்த வீட்டில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றன. சூரியன், சுக்ரன் ஆகிய இரண்டு கிரகங்களும் உச்சம் பெற்றிருக்கின்றன. அஷ்டமத்தில் குருசஞ்சரித்தாலும் அதன் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும். தொழில் ஸ்தானாதிபதி சுக்ரன் உச்சம் பெற்றிருப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இடையூறு சக்திகள் விலகும்.
இம்மாதம் லட்சுமிதேவி உடனாய வெங்கடேசப் பெருமாளை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஏப்ரல்: 15, 16, 18, 19, 20, 30 மே: 1, 4, 5, 6 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் நல்ல தகவல்கள் இல்லம் தேடிவரும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புது முயற்சியில் வெற்றி கிடைக்க அருகில் இருப்பவர்கள் ஆதரவு தருவர். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கான முயற்சிகள் வெற்றி யாகும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம், கூடுதல் சம்பளம் போன்றவை கிடைக்கும். உத்தியோகத்தில் தலைசிறந்த நிறுவனங்களில் இருந்து கூட அழைப்புகள் வரலாம்.
ஆண்டு பலன் - 2022
சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசி வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் உங்களுக்கு ராஜயோக வாழ்க்கையைத் தர உள்ளது. வருட கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இது வரை பொது நலமுடன் ஊருக்காக உழைத்த உங்களுக்கு மனைவி, மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கான வாய்ப்பும், திட்டங்களும், சந்தர்பங்களும் தானே அமையும். வருங்காலம் பற்றிய நம்பிக்கையும் தைரியமும் பெருகும். செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். ஓடி ஓளிந்த நிலையில் இருந்து மாறி பூர்வ புண்ணிய பலத்தால் நிச்சயமாக அனைத்து விதமான நற்பலன்களும் இந்த புத்தாண்டில் காண முடியும். இனி புத்தாண்டிற்கான விரிவான பலன்களை காணலாம்.
குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் 13, ஏப்ரல் 2022 வரை குருபகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த காலத்தில் உங்களை பணவசதியின்மையால் ஏளனப்படுத்தியவர்கள், தேவைக்கு பயன்படுத்தியவர்கள் உங்களின் அருமை பெருமையை உணர்வார்கள். 7ல் உள்ள குருவால் திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். சிலருக்கு காதல் மலரும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்.
தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்துவார்கள். மனக்கசப்பு மாறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைக்கலாம். பழைய கூட்டாளிகள் விலகலாம். நண்பர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள் ளும் வாய்ப்பு ஏற்படும். இன்பச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு ஏற்படும்.
ஏப்ரல் 13, 2022ல் குரு பெயர்ச்சியாகி அஷ்டம் ஸ்தானமாகிய மீனத்திற்கு செல்லும் போது சில பழைய பிரச்சனைகள் தலை தூக்கும். சிலருக்கு தொழில் விருத்தியால் அளவிற்கு அதிகமான கடன் உருவாகலாம். வெகு சிலர் கடனுக்காக வம்பு வழக்கை சந்திக்க நேரும். சிலரின் குழந்தை களுக்கு ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். சிலருக்கு குழந்தைகளால் மன வேதனை உண்டாகும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். சிலருக்கு பங்காளிகளால் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு உருவாகலாம்.
அனைத்து செயல்களும் இழுபறியாக இருக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். சிம்ம ராசியினர் நம்பிக்கை தளராமல் தேவையற்ற பேச்சை தவிர்த்தால் இந்த குருப்பெயர்ச்சியை எளிதாக கடக்க முடியும். இந்த காலகட்டத்தில் ஆறுதலான விசயம் என்னவென்றால் உறவுகளின் ஆதரவு குறைந்தாலும் அறியாத அந்நிய புதிய உறவுகளால், புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் 6ம் அதிபதி சனி 6ல் ஆட்சி பலம் பெறுகிறார். மறைவு ஸ்தான அதிபதிகள் வலுப்பெறக்கூடாது. கெட்டவன் கெட்டால் தான் ராஜ யோகம். ருண, ரோக, சத்ரு ஸ்தானதிபதி சனி வலுப்பெறுவதால் ருணம், ரோகம், சத்ரு இந்த மூன்றும் உங்களை ஆட்சி செய்யப் போகிறது.
அதனால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். இயன்றவரை கடன் வாங்காமல் இருந்தால் அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு முன் கடன் இல்லாத வாழ்வு உறுதி. அதே நேரத்தில் நோய் தாக்கமும் மிகுதியாக இருக்கும். பரம்பரை வியாதிகள் உங்களை ஆட்சி செய்ய ஆரம்பமாகும். வாயுத் தொல்லை, வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய், இருதயம், வயிறு தொடர்பான நோய்கள் மிகும். சிலருக்கு நோயின் தன்மை புரியாது. பலருக்கு நோய் முற்றிய பிறகு நோயின் தன்மை புரியும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.
26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை சனி பகவானுடன் 4,9ம் அதிபதியான செவ்வாய் 6ம் அதிபதி சனியுடன் 6ம் இடத்தில் இணைகிறார்கள்.அதீத கடனும் மிகைப்படுத்தலான விரையமும் உண்டாகும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் பட்டு சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்றுவீர்கள். வீடு கட்டும் பணியில் பட்ஜெட் எகிறும். சிலருக்கு வீடு, வாகனம் பழுதாகி அதிக செலவு வைக்கும் அல்லது மின்சார உபகரணங்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி புதியதாக வாங்க நேரும்.
அசையாச் சொத்தில் உள்ள குடியிருப்பு தாரர்களால் தொந்தரவு வரும் அல்லது குடியிருப்புதாரர்கள் மாறலாம். பூர்வீகச் சொத்தால் உடன் பிறந்தவர்களுடன் வம்பு, வழக்கு, பகை உருவாகும். சிலருக்கு பூர்வகச் சொத்து கை விட்டுப் போகும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு வாடிக்கையாளர்களால் வம்பு, வழக்கு உருவாகும். தாய், தந்தையின் ஆரோக்யம் சீராகும். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல நேரும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்புக்காக வெளியூர் செல்லநேரும்.
ராகு/கேது சஞ்சார பலன்: பத்தில் ராகு நான்கில் கேது இருப்பதால் தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு நீங்கும். தாய், தந்தை கருத்து வேறுபாடு அகலும்.ராசி அதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் ராசிக்கு10ல் கோட்சார ராகு சஞ்சாரம் செய்கிறார். தொழில் தொடர்பான மன உளைச்சல் நீங்கும். தொழிலில் வளர்ச்சியும் பெரும் ஏற்றத்தையும் லாபத்தை கொடுத்து திணறச் செய்வார். சூரியனும் ராகுவும் கடும் பகை கிரகம் என்பதால் இதுவரை நியாயம் தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்களை கூட தொழில் தர்மத்தை கடைபிடிக்க விடமாட்டார். பண வாசனையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகும். தனவரவு மன மகிழ்வை தரும். பல்வேறு தொழில் தந்திரங்களை கற்பீர்கள்.
ஆயுள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடல் உபாதைகள் கட்டுப்படும். தனிமையில் காலம் தள்ளியவர்களுக்கு பொழுதை கழிக்க நல்ல நட்பு கிடைக்கும். பய உணர்வு நீங்கும். தைரியம், தெம்பு ஏற்படும். தன்னை அழகு படுத்துவதில் ஆர்வம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தாமாகவே நடக்கும். உங்களை ஏளனம் செய்தவர்கள் மதிப்பு மரியாதை தருவார்கள். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான சூழ்நிலை நிலவும் ஏப்ரல் 12, 2022ல் ராகு/கேது பெயர்ச்சிக்குப் பிறகு 3ல் கேதுவும் 9ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆன்ம பலம் பெருகும். சூரியனே ஆத்மகாரகன். தந்தைக்கும் காரகனாவார். எண்ணங்கள் மற்றும் முன்ஜென்ம பூர்வ புண்ணியத்துக்கு காரகன் சூரியனே என்பதால் முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். விபரீத ராஜ யோகம் உண்டாகும்.
சில குழந்தைகள் தந்தையை பிரிந்து தாத்தா வீட்டிற்கு செல்ல நேரும் அல்லது தந்தை குறுகிய காலத்திற்கு தொழில் நிமித்தம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக தந்தை குழந்தையை பிரிந்து வாழ நேரும். கற்பனையில், கனவில் வாழும் நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்களின் மனஸ்தாபம் நீதி மன்றம் வரைச்செல்லும். உறவுகளுக்காகசூழ்நிலைக் கைதியாக வாழும் நிலை இருக்கும். இன்னல்களை தவிர்க்க முன்னோர்களின் முறையான வழிபாடு அவசியம்.
திருமணம்: ஏழாம் அதிபதி சனி கோட்சாரத்தில் 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் வெகு சிலருக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை இருக்கலாம். தற்போதைய கோட்சார குரு கும்பத்தில் இருப்பதால் ஏப்ரல் 2022க்குள் திருமணம் நிச்சயமாகிவிடும். பலருக்கு விருப்ப விவகாகமாகவோ, நெருங்கிய உறவுகளிலோ திருமணம் நடக்கும்.
பெண்கள்: பெண்களுக்கு சுமாரான நேரம். பெண்களுக்கு மாமனார், மாமியார் நாத்தனார் வகையில் அதிக தொந்தரவு உண்டாகும். வயது முதிர்ந்த பெண்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும்.முக்கிய ஆவணங்கள், நகைகள் கை மறதியாகவைத்துவிடுவீர்கள்.காது கேளாமை அல்லது ஞாபக சக்தி குறைவு உண்டாகும்.தந்தையின் ஆரோக்கிய பாதிப்பு மன வருத்தத்தை தரும்.
விவசாயிகள்: வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். சிறிய விளை நிலத்தையும் அடமானம் வைத்து விட்டு வாழ வழி தெரியாமல் தடுமாறிய விவசாயிகள் கடன் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும். அரசுப் பணிக்கு தேர்வு எழுதும் சிம்ம ராசியினருக்கு பெற்றி கிடைக்கும். அலுவலகமே வியக்கும் வகையில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.
முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும் வழி புலப்படும்.
அரசியல்வாதிகள்: அரசியல் பிரமுகர்கள் பதவியை தக்க வைப்பதில் சிரமம் இருக்கும். சிலர் அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறி தன் எதிர்காலத்தை அதிர்ஷ்டமாக்கி தக்க வைத்துக் கொள்ளலாம். கௌரவம், அந்தஸ்தை நிலை நிறுத்த போரட நேரும். எந்தப் பிரச்சனையையும் நேருக்கு நேர் நின்று போரிட்டு சமாளிப்பீர்கள். தன்னை நம்பி வருபவர்களுக்கு யாரும் சொல்ல முடியாதபடி நியாய தீர்ப்பு கிடைக்க பாடுபடுவீர்கள்.
மாணவர்கள்: உயர் கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பைத் தொடரும் வாய்ப்பு உண்டாகும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகள் அதிகம் சிரமம் எடுக்க வேண்டும்.
மகம்: சுறுசுறுப்போடு செயல்பட்டு பெயர், புகழ், பெருமை அடைய முடியும். பெயர் புகழ் உண்டாகும். கோவில் பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாற்றம் செய்ய நேரும். நிம்மதியை அதி தரிக்க கால பைரவரை வணங்குவது சிறப்பு.
பூரம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். பிரிந்த உறவுகள் இணைவார்கள் விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து தங்கு தடையில்லாத காரிய அனுகூலம் உண்டாகும். ஆண்டாள் வழிபாடு செய்வதால் சுப பலன்கள் மிகுதியாகும்.
உத்திரம் 1ம் பாதம்: அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகி கடன் குறையும். ஞாயிற்று கிழமை ஜேஷ்டா தேவியை வழிபட இன்னல்கள் நீங்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சுபகிருது வருட பலன்
சுய கவுரவம் காப்பதில் வல்லவர்களான சிம்ம ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்க 9ம் இடமான பாக்கியஸ்தானத்தில் ராகுவும், சகாய ஸ்தானமான 3ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.குருபகவான் 8ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 6,7ம் இடத்தில் உலா வருகிறார். குருபகவான் நின்ற 8ம் வீட்டு பலனாக விபரீத ராஜ யோகம் உண்டாகலாம். 8ம்மிடம் என்பதால்நிதானமற்ற செயல்களால் சில வம்பு வழக்குள் ஏற்படலாம். ஆனால் குரு பார்த்த இடத்தின் பலன்கள் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.
இதனால் லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். 3ல் கேது சஞ்சரிப்பதால் மனம்விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில முக்கிய திருப்பங்கள் உங்கள் வாழ்வில் உண்டாகும். 9ல் ராகு நிற்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. சிலருக்கு மதம் மாறும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும். ஆறாம் அதிபதி சனி ஆறில் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்களின் தொல்லை குறையும்.
குடும்பம்: இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்திற்கு கோடி நன்மைகள் உண்டாகும். ஒரே வீட்டில் வசித்தும் ஒருவருடன் மற்றொருவர் பேசாமல் ஆளுக்கொரு தீவாக மொபைலுடன் வாழ்ந்த நிலை மாறும். குடும்பம் மகிழ்ச்சியாக மாறும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். அனைவரும் விட்டுக் கொடுத்து இயல்பாக வாழ்வீர்கள். ஈகோ குறையும். சொல்வாக்கால் செல்வாக்கு உயரும். குடும்ப சந்தோஷமாக இருக்கும். கூடி வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை உணர்வீர்கள். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களள், வேற்று மதத்தின வரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்:ஆறாம் அதிபதி சனி 6ல் ஆட்சி பலம் பெறுவதால் சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நேரத்திற்கு சத்தான உணவாக நன்றாக சாப்பிட்டு ஒய்வெடுத்தால் எந்த வியாதியும் அண்டாது.வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
திருமணம்: சிம்ம ராசியினருக்கு திருமணத்திற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. மேலும் ஏழாம் அதிபதி சனி கோட்சாரத்தில் 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் வெகு சிலருக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை இருக்கலாம். 5ம் அதிபதி குரு 8ல் ஆட்சி பலம் பெறப் போவதால் சிலர் காதல் திருமணத்தால் அவமானப்பட வாய்ப்பு உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் 8ம் இடம் சுத்தமாக இருந்து , தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு கோட்சார குருவால் எந்த பாதிப்பும் இருக்காது.
பெண்கள்:கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மனதிற்கும் நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். குடும்பச் சுமை சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உள்ளது.பிறந்த வீட்டு சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் உங்களை கவுரவப்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அதிக கவனம்செலுத்துவீர்கள்.ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
மாணவர்கள்:3ல் ராகு 9ல் கேது இருப்பதால் சில மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறையுலாம். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு தடைபட்ட கல்வியை மீண்டும் தொடர வாய்ப்பு கிடைக்கும். சில பிள்ளைகள் பள்ளி, கல்லூரியை மாற்றலாம். தினமும் ஹயக்கீ வரை வழிபட படித்த பாடம் நன்றாக மனதில் பதியும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி கற்க விரும்புபவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள்: மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது.
முதலீட்டாளர்கள்:பூர்வீக குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். சனி மற்றும் குருவின் நிலைகள் சற்று சாதகமற்று இருப்பதால் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள்:லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள் தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கட்சியில் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும்.நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும்.
கலைஞர்கள்: ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.
விவசாயிகள்: விவசாயத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். மிகுதியான லாபம் கிடைக்கும். சிலர் குத்தகைக்கு விவசாய நிலம் பெறுவீர்கள். சிலர் சொந்தமாக விவசாய நிலம் வாங்குவீர்கள்.4ம் இடத்தில் கேது இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்பை இந்த ராகு/கேது பெயர்ச்சி உங்களுக்கு வழங்கும். வாய்க்கால், வரப்பு தகராறை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்கவும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். 18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 9ல் ராகுவும் 3ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.உயில் பிரச்சனை தலை தூக்கும்.
ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயில், ஆவணங்களில் சிலர் திருத்தம் செய்வார்கள். பாகப்பிரிவிதையில் மன பேதம் மிகுதியாகும். கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்லலாம். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையலாம் சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.
குரு:29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும்.தொலைந்த, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள்.
பரிகாரம்:ஞாயிறு காலை 6 --7 மணி வரையான சூரிய ஒரையில் வில்வ அர்ச்சனை சிவ வழிபாடு செய்து வர நன்மைகள் அதிகரிக்கும்.
தொழில் வளர்ச்சி சிறக்கும்
தன ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு குருவின் 7ம் பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் தடையில்லாத வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், உணவுத் தொழில் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 6ல் சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் விரும்பிய கடன் தொகை கிடைக்கும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் என சுப செலவுகள் மிகுதியாக இருக்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஆறில் வருகிறது சனி, அனைத்திலும் வெற்றி இனி!
சிம்ம ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 6-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 6-ம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிப்பதாகும். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எதிரிகள் ஸ்தானாதிபதி, எதிரிகள் ஸ்தானத்திலேயே இப்பொழுது சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். பகை பாராட்டியவர்கள் பாசம் காட்ட முன்வருவர். ஜீவன ஸ்தானமாகவும் அது கருதப்படுவதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் உங்கள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. சப்தமாதிபதியாகவும் சனி விளங்குவதால், குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது வரத்தான் செய்யும்.
எதிரிகளின் பலம் குறையும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தை அடையும் சனி பகவானால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி சகோதரம், சகாயம், வழக்குகள், உடல்நலம், இழப்புகள், இடமாற்றங்கள், தூரதேசப் பயணங்கள், விரயங்கள், கடன் சுமை, ஆயுள் விருத்தி, நீங்காப்பகை, ஏமாற்றம், புனிதப்பயணங்கள், மூதாதையர் சொத்துக்கள் சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகளின் பகை அகலும். சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சனியின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சிறுசிறு ஆரோக்கியத் தொல்லைகள் வந்து அலைமோதும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், திடீர் திடீரென பயணங்கள் ஏற்படும். வாடகை வாகனத்தில் உலா வந்த நீங்கள், இனி சொந்த வாகனம் வைத்துக்கொள்ள வாய்ப்புகள் கைகூடிவரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சந்தோஷ வாய்ப்புகள் ஏராளமாக வந்து சேரும். சிந்தித்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சனி பகவான், உங்கள் ராசி நாதனான சூரியன் காலில் சஞ்சரிப்பதால் பிரகாசமான எதிர் காலம் உங்களுக்கு வந்து சேரும். மனையில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபவிரயங்கள் அதிகரிக்கும். விரயாதிபதியாக சந்திரன் விளங்குவதால் இக்காலத்தில் வீட்டுப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ளலாம். அசையாத சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனைகட்டிக் குடியேறும் யோகம் உண்டு. குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமாவார். எனவே பூமி விற்பனை தொழில் செய்பவர்களுக்கு, பொருளாதாரநிலை நினைக்க இயலாத அளவு உயரும். இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்குச் செல்கின்றார். கண்டகச்சனியாக இருந்தாலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு என்பதால் கெடுபலன்களை கொடுக்க மாட்டார். புது முயற்சிகளில் தாமதம் உருவாகலாமே தவிர, காரியம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் வருவதால், அதன் பார்வை பலம் உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கும். ஆரோக்கியம் சீராகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சுபகாரியங்கள் முடிவடையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. வருமானம் இருமடங்காக உயரும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். எனவே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. இதனால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கேது மூன்றில் இருப்பதால் சகோதரர்களிடையே ஒற்றுமை குறையலாம். கூட்டு வியாபாரம் செய்த உடன்பிறப்புகள் தனித்தியங்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அஷ்டமத்தில் ராகு வருவதால் ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடலாம். இருப்பினும் குரு வீடாக இருப்பதால் சுபவிரயங்களே அதிகரிக்கும். கேது சஞ்சாரத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதமிருந்து சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இல்லத்துப் பூஜை அறையில் சிவ குடும்ப படம் வைத்து திருவாசகம் படித்து வழிபடுவது நல்லது. வாழ்க்கை வளமாக அமையும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
8ம்மிட குருவின் பொதுபலன்கள்: சிம்ம ராசிக்கு குரு 5,8ம் அதிபதி. 5ம்மிடம் என்பது பூர்வ ஸ்தானம், புகழ், கீர்த்தி, அந்தஸ்து, கவுரவம் குழந்தைகள் பற்றிக் கூறுமிடம். பூர்வ புண்ணியாதிபதி குரு ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்ம பலம் பெருகும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் கருத்தரிப்பார்கள்.பிள்ளைகள் தொழில், ஊத்தியோகத்திற்காக குடும்பத்தை விட்டு வெளியூர் செல்வார்கள். செய்யும் தொழிலில் முன்னேற்றம், தாராள பணப் புழக்கம், பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும்.
8ம்மிடம் என்பது ஆயுள் வம்பு, வழக்கு ஆகியவை பற்றிக் கூறுமிடம். அதனால்அஷ்டமாதிபதி வலுக்கக் கூடாது என்ற பயமும் இருக்கத்தானே செய்யும். 8ம் இட குருவிற்கு சனி பார்வையும் இருப்பதால்எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், அன்பளிப்பு, சீதனம் எதிர்பாராத தன லாபம், லாட்டரி, ஆயுள் காப்பீடு, திடீர் அதிர்ஷ்ட உயில் சொத்து போன்ற எதிர்பாராத தன வரவு குடும்பத்திற்குகிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். சிலருக்குநீண்ட காலம் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் சிறு அவஸ்தைகள் இருந்தாலும்நித்திய கண்டம் பூரண ஆயுள் . ஆயுள் தீர்க்கம் .எவ்வளவு நோய் தாக்கம் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் இல்லை. நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும் வகையில் முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.
ஜனன கால ஜாதகத்தில் 8ம்மிடத்துடன் சம்பந்தம் பெறும்தசை நடப்பவர்கள் தனிமையாக, வெளிநாட்டிற்கு சென்று கஷ்டப்படும் நிலை ஏற்படும். சிலர்தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்கள். சிலர்கற்பனையில், கனவில் வாழ்வார்கள். நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிலரின் பெயர் புகழுக்கு களங்கமும் உண்டாகளாம். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் தலை தூக்கும். உங்களின் சகோதர, சகோதரி வழியில்சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட்டு மன உளைச்சல் உண்டாகலாம். சிலருக்கு பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.
5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். இல்லத்து விசேஷம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காககடன் வாங்க நேரலாம். பழைய கடனை அடைக்கபுதியகடன் வாங்க நேரும். முறையான அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில்கடன் வாங்குவது சிறப்பு . உடனடியாகபணம் கிடைக்கிறது என்பதற்காக நீட்டியஇடங்களில் கையெழுத்து இட்டு முறையற்ற நிதி நிறுவன வங்களிடம் கடன் வாங்குவது வீண் அவமானத்தை தேடித் தரும்.
“பதறாத காரியம் சிதறாது “ முறையான திட்டமிடல் சங்கடங்களை தீர்க்கும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். ஆவணங்களை படித்து பார்த்து கையெழுத்துப்வேண்டும். வெற்றுப் பத்திரம், வெற்று காசோலைகளில் கையெழுத்து இடுவதை தவிர்த்தல் நலம்.முன்னோர்கள் சொத்து அடமானத்தின் பேரில் கடன் பெறநேரும். எவ்வளவுமன அழுத்தம் இருந்தாலும் படுத்தவுடன் தூக்கம்வரும். படுத்தவுடன்தூக்கம்பெரிய வரப்பிரசாதம்.நிம்மதியான தூக்கத்தை குருபகவான்இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு வழங்கும்.
7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 2ம்மிடமான தன ஸ்தானத்திற்கு இருப்பதால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் வலுப்பெறுகிறது. தன வரவில் ஏற்பட்ட தடைகள் அகலும். முக்கிய குடும்ப தேவைகள் நிறைவடையும். இல்லை என்ற நிலை இனி இல்லை. உழைப்பிற்கு ஏற்றவருமானம்நிச்சயம் உண்டு. அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகஇருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பொருள் தேடுவதற்காக ஆளுக்கொரு திக்கில் சிதறிய குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் நெருங்கிய ரத்த பந்த உறவுகளைக் கண்டவுடன் மனம் லயிக்கும்.உங்களின் 2ம் அதிபதி புதன் என்பதால் இயல்பிலேயே நகைச்சுவை பேச்சுத்திறன் கொண்ட உங்களைதர்க்க வாதங்களில் யாரும் வெல்ல முடியாது. பேச்சாற்றலால்உங்களின்காரியங்களை சாதிக்க முடியும். சுவையான உணவு வகைகளை உண்பதில் விரும்பம் மிகும்.
9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. பூமிகாரகனான செவ்வாயின் தொழிலான ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் திறமை பாராட்டப்படும். கால்நடைகளான ஆடு, மாடு, கோழி மற்றும் உயிரினம் வளர்ப்பவர்கள் பண்ணையாளர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். தொட்டது துலங்கும்.
என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும். புதிதாக சொத்து வாங்குபவர்களுக்கு எதிர்காலத்தில் பல மடங்கு மதிப்பு உயரக்கூடிய இடத்தில் சொத்து அமையும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த சொத்திற்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்.தொல்லை கொடுத்த பழைய வாடகைதாரர் இடத்தை காலி செய்வார். பலருக்கு வாகன யோகம் பலிதமாகும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாடகை வீட்டில் இருந்தவர்கள்சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். வீடு,வாகன யோகம் பலிதமாகும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம்கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை விற்க முடியாமல் கிடந்தஅசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும்.
வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 6ம் அதிபதி சனியின் பார்வையும் 8ம் இடத்திற்கு இருப்பதால் குருவின் வக்ர காலத்தில்தொழில் உத்தியோகம் தொடர்பான வம்பு வழக்குகள் ஏற்படலாம். முடிந்த வரைவம்பு வழக்கை தவிர்க்க வேண்டும். ஏதேனும்காரணத்திற்காககோர்ட் கேஸ் பிரச்சனை வந்தால்வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் அல்லது மத்தியஸ்தர்களிடம் சென்றுசமாதானம்பேச வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வரலாம். குரு இந்த காலகட்டத்தில் உங்களின் நண்பன் யார்? எதிரி யார்? என்பதை அடையாளம் காட்டி விடுவார். தனிமையை விரும்ப செய்வார்.
பெண்கள்:2ம்மிடமான குடும்ப ஸ்தானத்திற்கும் 12ம்மிடமான அயன சயன ஸ்தானத்திற்கு குருப்பார்வை இருப்பதால் கணவர் உங்கள் மேல் அன்பை பொழிவார்.தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். கோட்ச்சாரத்தில் உங்களின் 9ம் அதிபதி செவ்வாய் பலம் பெறும் காலத்தில் மாங்கல்ய சரடு மாற்றினால் கணவரின் ஆயுள், மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும்.கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.
பரிகாரம்: வெற்றிலை, பாக்குடன் கல்கண்டு வைத்து வெள்ளி கிழமை இஷ்ட, குலதெய்வம், மகாலட்சுமி வழிபாடு செய்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் மகான் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரை வழிபட மனக் குறை நீங்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
ஒன்பதில் ராகு/ மூன்றில் கேது
ராஜயோகம் நிரம்பிய சிம்ம ராசியினரே ராகு/கேதுக்கள் 9,3ம் இடத்திலும் கேதுவும், குருபகவான் 8, 9ம் இடத்தில் சனி பகவான் 6,7ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
ஒன்பதாமிட ராகுவின் பலன்கள்:ராகு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுவது சற்று ஆறுதலான விசயம் தான். லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும்.
சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும். சிலர் கடவுள் என் சட்டைப்பையில் என புது ஆன்மீகவாதியாக உருவெடுப்பார்கள். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். மற்றபடி இந்த காலகட்டத்தில் குரு அஷ்டமத்தில் ஆட்சி பலம் பெறுவதால் தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும். சனியின் சஞ்சாரம் திருமணத் தடையை அகற்றும். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராகு ராசி அதிபதி சூரியனின் நட்சத்திரமான கிருத்திகையில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். சூரியனே ஆத்மகாரகன். தந்தைக்கும் காரகனாவார். பூர்வ புண்ணியத்துக்கு காரகன் என்பதால் முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். சூரியன் ராகு சம்மந்தம் கிரகண தோஷம் என்பதால் தந்தை தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்.சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். சிலரின் பெயர் புகழுக்கு களங்கமும் உண்டாகும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி சிம்மத்திற்கு 3,10ம் அதிபதி. மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழில், அழகு, ஆடம்பர பொருட்கள், வாசனை திரவியங்கள், பூக்கள், மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் கோட்சார கேதுவின் நட்சத்திரத்தில் ராகுவின் பயணம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.
கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்லலாம். வாழ்க்கைத் துணை அல்லது நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். மனதில் கலக்கம் தோன்றும்.
ஞாபக சக்தி குறையலாம். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கிஜிவி கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். கமிஷன் அடிப்படையான தொழில், தரகு, தகவல் தொடர்பு, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழில் பெயர், புகழ் கிடைக்கும்.
மூன்றாமிட கேதுவின் பலன்கள்:மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம் . வெற்றி , புகழ் இளைய சகோதரம், வீரம், மனபலம்,தைரியம், வீரிய ஸ்தானம் போன்றவற்றைப்பற்றி கூறும் இடம். தார்மீக உணர்வுடன் செயல்படுபவர்களுக்குவெற்றியும் புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களுக்கு வெற்றி கை நழுவும், புகழும் மரியாதையும் குறையும். மூன்றாம் அதிபதி சுக்கிரனின் வீட்டில் கேது என்பதால் சுய ஜாதகத்தில் சுக்ரன் பலவீனமாக இருந்தால் பெண்களால் ஆண்களுக்கு மன சங்கடம் ஏற்படும். சுக்ரன் வலு பெற்றவர்களுக்கு புதிய பெண்ணின் நட்பு கிடைக்கும்.
தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயில், ஆவணங்களில் சிலர் திருத்தம் செய்வார்கள். பாகப்பிரிவிதையில் மன பேதம் மிகுதியாகும். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்வார்கள். இல் வாழ்க்கையில் பற்று குறையும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் போகியத்திற்கு வீடு பிடித்து செல்லலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.
உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். நவீன தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு சிம்மத்திற்கு 5,8ம் அதிபதி. அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் இணைந்து விபரீத ராஜ யோகத்தை தரும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். சிலருக்கு தவறான நட்பால் வம்பு வழக்கு உருவாகும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலம். மனிதனை லௌகீக வாழ்வில் ஈடுபட செய்வது ராகு என்றால் மோட்சத்தை தருவது கேது பகவான். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பணக்காரனாக வாழ வேண்டும் என்ற ஆசை குறையும். அதே நேரத்தில் இறைவனைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தாத வரம் வேண்டும் பிரார்த்திப்பீர்கள். மறு ஜென்மம் இல்லாமல் மோட்சத்தை பெற தான, தர்மங்கள் செய்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் வழி இருக்கிறதா என்ற சிந்தனை மேலோங்கும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை சிம்மத்திற்கு 4,9ம் அதிபதி. பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் குறையும். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டு. தந்தையின் பூர்வகச் சொத்து உங்கள் பெயரில் பட்டா போடப்படும். விற்க முடியாமல் கிடக்கும் பல வருடங்களாக கிடந்த சொத்துக்கள் விற்கும். புரோகிதர்கள், ஜோதிடர்கள், டூரிஸ்ட் தொழில், ஆடிட்டர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். தீர்த்த யாத்திரை, மகான்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
நல்லது, கெட்டது இரண்டும் அவரவரின் செயலைப் பொறுத்ததுதான். இறைவனை சரணாகதி அடையும் போது எல்லா நல்ல நாட்களாகவே அமையும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406


