
இன்றைய ராசி பலன்கள்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
வார பலன்கள்
15.1.21 முதல் 21.1.21 வரை
சந்திரன், செவ்வாயால் நன்மை உண்டு. சூரியன் வழிபாடு வளம் தரும்.
மகம்: ஆசிரியர்கள், பணியாளர்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாக கையாளவும். உடல் நலனில் கவனம் தேவை. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.
பூரம்: நீங்கள் மதிக்கும் நபருடைய உதவி கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாரா சிறு அதிர்ச்சி ஏற்பட்டு மீளுவீர்கள். வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.
உத்திரம் 1: இது வரை பயன்படுத்தாத சில வாழ்க்கை வசதிகள் உங்களை தேடி வரும். புதியவர்களின் நட்பால் தொல்லை ஏற்படாமல் கவனமாக இருங்கள். நண்பர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்வீர்கள்.
தமிழ் மாத ஜோதிடம்
14.1.2021 முதல் 12.2.2021 வரை
கடக ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் எந்த ஒரு புது முயற்சியில் ஈடுபட்டாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். மருத்துவச் செலவு ஏற்படலாம்.
பஞ்சம கேதுவின் ஆதிக்கம்
சர்ப்பக் கிரகமான கேது, இம்மாதம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். 5-ம் இடம் புத்திர ஸ்தானமாகவும் கருதப்படுவதால், பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கும். அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் அக்கறை காட்டுவீர்கள். கடன் சுமையால் ஒரு சில சொத்துக்களை விற்க நேரிடும். அதே நேரம் லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால், பண நெருக்கடி அகல, புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பயணங்களில் இடையூறு இருக்கும்.
கண்டகச் சனியின் ஆதிக்கம்
உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களும், கூட்டுக்கிரக யோகத்தை வழங்குகின்றன. ராசிநாதன் சந்திரன், ராசியைப் பார்ப்பது யோகம்தான். ஏழாமிடத்தில் சனி சஞ்சரிப்பதால், அதை ‘கண்டகச்சனி’ என்று சொல்வது வழக்கம். எனவே உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் உட்பூசல்கள் அதிகரிக்கும். விரயாதிபதி புதன், சனியோடு இணைந்திருப்பதால் சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும்.
மகர - புதன் வக்ரம்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் ஜனவரி 21-ந் தேதி வக்ரம் பெறுகின்றார். பிப்ரவரி 10-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். இந்த காலகட்டத்தில் சகோதர ஒற்றுமை குறையலாம். வழக்குகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத இடமாற்றங்களால் மனக்கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருக்கின்றார். இருப்பினும் சனியோடு இணைந்து நீச்ச பங்கம் அடைகின்றார். ஜனவரி 22-ந் தேதி அவர் மேலும் வலிமை இழக்கின்றார். எனவே தந்தை வழியில் அனுகூலங்கள் குறையலாம். 6-ம் இடத்திற்கு அதிபதியான குரு பகவான் வலிமை இழக்கும் பொழுது, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது வாகன யோகம் வரும். புகழ்மிக்கவர்களால் சில காரியங்களை சாதிப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ‘கட்டிடம் கட்டியும் வாடகைக்கு ஆள் வரவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அந்தக் கவலை மறையும்.
இம்மாதம் தைப்பூசம், செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 19, 20, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் அதைவிட கூடுதலாக இருக்கும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எந்தவொரு வேலையையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால், பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.
ஆண்டு பலன் - 2021
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2021-ம் புது வருடம் நற்பலன்கள் அதிகம் உள்ள வருடமாக இருக்கும். பிறக்க இருக்கின்ற புத்தாண்டு கூடுதல் நன்மைகளை தரும்.
30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனிபகவான் 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் ஆறாமிடத்தில் சனி இருப்பது சிம்மத்திற்கு மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும். பாவக்கிரகங்கள் மூன்று ஆறு பதினொன்றில் கோட்சார ரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த புத்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் அதிசார முறையில் குருவும் ஏழாமிடத்திற்கு மாறப் போகிறார். இது உங்களுக்கு தொழில் அமைப்புகளில் யோகம் தரும். அதேபோல வருட ஆரம்பத்தில் செவ்வாயும் ஆட்சி நிலையில் இருப்பதால் சிம்மத்தின் முன்னேற்றத்திற்கு தடைகள் எதுவும் இந்த வருடம் கோட்சார ரீதியாக இல்லை.
தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
அரசு, தனியார்துறை பணியாளர்கள், ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. சுயதொழில் செய்வோருக்கு முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். சரியான வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
தொழில் ஸ்தானத்தில் ராகு சுபத்துவமாக இருப்பதால் பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும். கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இது வரை வராமல் இருந்த சம்பளப் பாக்கி இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும்.
இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு தொகை வரும். சிரமங்கள் அனைத்தும் தீரும்.
புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும்.
இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.
பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.
ரியல்எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.
விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் வருடம் இது.
வருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை குடும்பத்தில் உள்ள ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும் தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.
மொத்தத்தில் சிம்ம ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்றவர்கள் இந்த நல்ல நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும். சிம்மத்திற்கு கோட்சார ரீதியில் கவலை இல்லாத வருடம் இது. எதையும் துணிந்து செய்யலாம்.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
சார்வரி வருட பலன்
சார்வரி வருடத் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்றும், தனாதிபதி புதன் நீச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார்கள். பஞ்சம ஸ்தானத்தில் விரயாதிபதி சந்திரனோடு சனியும் கேதுவும் கூடியிருக்கிறார்கள். 6-ல் செவ்வாய் வக்ரம் பெற்று குருவோடு இணைந்திருக்கிறார். குரு நீச்சம் பெற்றிருந்தாலும் சனி குரு வீட்டிலும், குரு சனி வீட்டிலும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். குரு-மங்கள யோகமும், அமைந்துள்ளது. லாப ஸ்தானத்தில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சுக்ரனும் இருந்து ஆண்டு தொடங்குவதால் இந்த ஆண்டு வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். வருமானம் உயரும்.
ராகு- கேது பெயர்ச்சி
1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு ராகுவும், 4-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும். தொழில் தொடங்கும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். வங்கிகளின் ஒத்துழைப்பு உண்டு. மக்கள் செல்வாக்கு மேலோங்கும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். திசாபுத்தி பலம்பெற்றவர்கள் தனித்து இயங்கும் வாய்ப்பை வரவழைத்துக்கொள்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாமதப்பட்ட பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு அது பற்றிய தகவல் வரலாம்.
குருப்பெயர்ச்சி
15.11.2020 அன்று மகர ராசிக்கு குரு பெயர்ச்சியாகி செல்கிறார். அது குருபகவானுக்கு நீச்ச வீடாகும். அது ஒரு வகைக்கு நன்மைதான். இக்காலத்தில் ராஜாங்க ஆதரவும், ராஜயோக வாழ்க்கையும், வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவாகும். பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாக நிறைவேற்றுவீர்கள். நிலையான வருமானம் வரும். பயணங்கள் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.
சனிப்பெயர்ச்சி
26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்க ரீதியாக சனி பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பணத் தட்டுப்பாடு அகலும். நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். இதுவரை மனம் மாறாமல் இருந்த மேலதிகாரிகள், இப்பொழுது உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
குரு வக்ரமும், அதிசாரமும்
13.5.2020 முதல் 7.7.2020 வரை மகர ராசியில் குருபகவான் அதிசாரமாகி வக்ரம் பெறுகிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர கதியில் இருக்கின்றார். இக்காலத்தில் சனிபகவானும் குருவோடு இணைந்து வக்ர கதியிலேயே தனுசு ராசிக்குள் உலாவருகிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு குரு அதிசாரமாகச் செல்கிறார். இந்த வக்ர இயக்க காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே பலன்கள் நடைபெறும். அஷ்டமாதிபதியாக மட்டுமல்லாமல் பஞ்சமாதிபதியாகவும் குரு விளங்குவதால் பிள்ளைகள் வழியில் பெரும் விரயம் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம்.
வழிபாடு
தேய்பிறை அஷ்டமி திதியில் வைரவர் வழிபாட்டை மேற்கொண்டால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஆறில் வருகிறது சனி, அனைத்திலும் வெற்றி இனி!
சிம்ம ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 6-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 6-ம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிப்பதாகும். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எதிரிகள் ஸ்தானாதிபதி, எதிரிகள் ஸ்தானத்திலேயே இப்பொழுது சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். பகை பாராட்டியவர்கள் பாசம் காட்ட முன்வருவர். ஜீவன ஸ்தானமாகவும் அது கருதப்படுவதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் உங்கள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. சப்தமாதிபதியாகவும் சனி விளங்குவதால், குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது வரத்தான் செய்யும்.
எதிரிகளின் பலம் குறையும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தை அடையும் சனி பகவானால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி சகோதரம், சகாயம், வழக்குகள், உடல்நலம், இழப்புகள், இடமாற்றங்கள், தூரதேசப் பயணங்கள், விரயங்கள், கடன் சுமை, ஆயுள் விருத்தி, நீங்காப்பகை, ஏமாற்றம், புனிதப்பயணங்கள், மூதாதையர் சொத்துக்கள் சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகளின் பகை அகலும். சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சனியின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சிறுசிறு ஆரோக்கியத் தொல்லைகள் வந்து அலைமோதும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், திடீர் திடீரென பயணங்கள் ஏற்படும். வாடகை வாகனத்தில் உலா வந்த நீங்கள், இனி சொந்த வாகனம் வைத்துக்கொள்ள வாய்ப்புகள் கைகூடிவரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சந்தோஷ வாய்ப்புகள் ஏராளமாக வந்து சேரும். சிந்தித்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சனி பகவான், உங்கள் ராசி நாதனான சூரியன் காலில் சஞ்சரிப்பதால் பிரகாசமான எதிர் காலம் உங்களுக்கு வந்து சேரும். மனையில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபவிரயங்கள் அதிகரிக்கும். விரயாதிபதியாக சந்திரன் விளங்குவதால் இக்காலத்தில் வீட்டுப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ளலாம். அசையாத சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனைகட்டிக் குடியேறும் யோகம் உண்டு. குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமாவார். எனவே பூமி விற்பனை தொழில் செய்பவர்களுக்கு, பொருளாதாரநிலை நினைக்க இயலாத அளவு உயரும். இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்குச் செல்கின்றார். கண்டகச்சனியாக இருந்தாலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு என்பதால் கெடுபலன்களை கொடுக்க மாட்டார். புது முயற்சிகளில் தாமதம் உருவாகலாமே தவிர, காரியம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் வருவதால், அதன் பார்வை பலம் உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கும். ஆரோக்கியம் சீராகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சுபகாரியங்கள் முடிவடையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. வருமானம் இருமடங்காக உயரும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். எனவே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. இதனால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கேது மூன்றில் இருப்பதால் சகோதரர்களிடையே ஒற்றுமை குறையலாம். கூட்டு வியாபாரம் செய்த உடன்பிறப்புகள் தனித்தியங்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அஷ்டமத்தில் ராகு வருவதால் ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடலாம். இருப்பினும் குரு வீடாக இருப்பதால் சுபவிரயங்களே அதிகரிக்கும். கேது சஞ்சாரத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதமிருந்து சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இல்லத்துப் பூஜை அறையில் சிவ குடும்ப படம் வைத்து திருவாசகம் படித்து வழிபடுவது நல்லது. வாழ்க்கை வளமாக அமையும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஆறில் வந்தது குரு பகவான், ஆயினும் ராஜயோகம் உண்டு!
சிம்ம ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 6-ம் இடத்திற்கு வருகின்றார். ‘6-ல் குரு வந்தால் ஊரில் பகை’ என்பார்கள். ஆனால் உங்களைப் பொறுத்தவரை, உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் குரு பகவான். 8-க்கு அதிபதியான குரு பகவான், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப, ராஜயோகம் தரக்கூடிய விதத்திலேயே கிரகங்கள் செயல்படப் போகின்றது. எனவே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் ஒருசிலருக்கு அமையும். இடையில் குரு 7-ம் இடத்திற்குச் செல்கின்றார். வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு யோக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஏதேனும் இடர்பாடுகள் வருமேயானால் வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து, குரு பகவானை வழிபடுவதன் மூலம் நற்பலன்களை வரவழைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இப்பொழுது மனதிற்கு பிடித்த வரன்கள் வந்து மகிழ்ச்சியோடு சுபகாரியம் நடைபெறப்போகின்றது. தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். வியாபாரம் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே பணிநிரந்தரம் அமையும். பதவி உயர்வும் கிடைக்கும்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில்கள் வாய்க்கும். முன்னேற்றம் அதிகரிக்கும். ‘தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு மூலதனம் கிடைக்கவில்லையே’ என்ற கவலை இனி அகலும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் வரலாம்.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்டதூரத்தில் பணிபுரியும் உறவினர்கள், உங்கள் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவர். பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்களும், பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளும், கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பும், குருவின் பார்வையால் வந்து சேரும். மாற்று மருத்துவம் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ள வழிகாட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு வியப்பர். சகப் பணியார்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிநாதன் சூரியன் ஆவார். அவரது சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார பற்றாக்குறை அகலும். புகழ்மிக்கவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தொடர்பு ஏற்படும். தடுமாறிய தொழில் இனி வீறுநடை போடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். இப்பொழுது சூரிய பலத்தால் கோபம் அதிகம் வரலாம். அதன்விளைவாக முன்னேற்றப் பாதையில் சில சறுக்கல்களும் வந்து சேரும். அனுபவஸ்தர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம், நல்ல பலன்களை வரவழைத்துக்கொள்ள இயலும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு விரயாதிபதி ஆவார். எனவே விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் எதிர்பாராத விதத்தில் அமையும். பயணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். இல்லத்தில் இதுவரை நடைபெறாத சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகளின் மேற்படிப்பு தொடர நீங்கள் செய்யும் ஏற்பாடுகள் வெற்றிபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். என்ன இருந்தாலும் சந்திர சாரம் என்பதால் மனஉறுதியுடன் உங்களைச் செயல்பட விடாது. தீட்டிய திட்டங்கள் திசைமாறியும் செல்லும். ஒரு சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடந்தாலும் கடைசியில் நல்ல விதமாக முடியும். தங்கு தடைகள் ஏற்படாமல் இருக்க பவுர்ணமி வழிபாடு உங்களுக்கு பலன்தரும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் யோகங்கள் அதிகமாகவே வந்து சேரும். இடம், பூமி விற்பனையால் ஆதாயம் கிடைக்கும். என்றைக்கோ விலை மலிவாக வாங்கிப்போட்ட இடம், இப்பொழுது பலமடங்காக விலை உயர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிட வல்லுநர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் விலகுவர். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செவ்வாய் அதிபதியாக விளங்குவதால், முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். பட்டா மாறுதல், சிட்டா மாறுதல் என்று இழுத்தடித்த நிலப்பிரச்சினை இனி எளிதில் முடியும். புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில்செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துகொண்டே இருக்கும். உள்ளமும், உடலும் ஆரோக்கியமாக அமையும். உதாசீனப்படுத்தி உங்களைவிட்டு விலகிச்சென்றவர்கள் தானாகவே வந்திணைவர். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேலும் குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே உடன்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியாக விளங்கும் குருவால், நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வீண் விரயங்களும், மனக்கவலைகளும் அதிகரிக்கும். இக்காலத்தில் சிறப்புப் பரிகாரங்களை செய்துகொள்வதன் மூலம் செய்தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். விரயத்தை, சுபவிரயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடலாம். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க சீர்வரிசைப் பொருட்களை வாங்கிச் சேர்க்கலாம். மேற்படிப்பு படிக்க விரும்பும் பிள்ளைகளுக்கு அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யலாம். தடுமாற்றங்கள் அகல இடமாற்றங்கள் கைகொடுக்கும். இக்காலத்தில் யாருக்கேனும் பொறுப்பு சொல்லி, தொகை வாங்கிக் கொடுத்தால் சிக்கல்கள் உருவாகலாம்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
சிம்ம ராசிக்கு தற்போது ராகு-கேதுக்களுக்கு நல்ல இடம் என்று சொல்லப்படும் பதினொன்றாமிடத்தில் இருந்து ராகு பெயர்ச்சியாகி, பத்தாம் இடத்திற்கும், கேது ஐந்தாமிடத்தில் இருந்து நான்காமிடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
இப்போது இருக்கும் பதினொன்றாம் இடம் ராகு-கேதுக்களுக்கு நல்ல இடம் என்று சொல்லப்பட்டாலும் ராகுவின் மூலம் மிகப்பெரிய நன்மைகள் எதையும் கடந்த காலங்களில் சிம்ம ராசி பெற்றுவிடவில்லை.
அதே நேரத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லப் படக்கூடிய நான்கு, ஏழு, பத்தாம் இடங்களில் பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், சூரியன், ராகு-கேதுக்கள் நன்மைகளை செய்வார்கள் என்ற விதியின் அடிப்படையில் மிகப்பெரிய துன்பங்கள் எதையும் இம்முறை உங்களுக்கு ராகு-கேதுக்கள் கொடுத்துவிடப் போவது இல்லை.
மேலும் ராகு இப்போது மாறப் போகும் வீடான ரிஷபத்தில் அவர் அதி நட்புநிலை பெறுவார் என்பதால் உங்களுக்கு கெடுதல்கள் எதையும் உறுதியாகத் தந்து விட மாட்டார். பெயர்ச்சியின் இன்னொரு நிலையாக கேதுவும் கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு மாறுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்புத்தான்.
உங்கள் ராசியின் பூரண ராஜயோகாதிபதியான செவ்வாயின் ஸ்திர வீடான விருச்சிகத்தில் சுப வலிமை பெறும் கேது, சூட்சும வலுவும் பெறுவதால் செவ்வாய் தரவிருக்கும் வீடு, வாகனம், ஆரோக்கியம், தாயார் சுகம், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் இப்போது உங்களுக்குத் தருவார்.
குறிப்பாக கோட்சார நிலையில் ஒரு மனிதனின் நல்ல, கெட்ட நிலையை முழுமையாக தீர்மானிக்கக் கூடிய கிரகமான சனி, இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலம் முழுவதும் உங்களின் சிம்ம ராசிக்கு ஆறாமிடத்தில் நல்லவைகளை தரும் நிலையில் உள்ளதாலும் இனிமேல் சிம்மத்திற்கு கெடுதல்கள் இல்லை.
மேலும் பிறந்த ஜாதக அமைப்புப்படி நல்ல தசா புக்திகள் நடப்பவர்களுக்கு, சனியின் ஆறாமிட நிலையால் பருத்தி புடைவையாக காய்த்தது எனும் அளவிற்கு இரட்டிப்பு நல்ல பலன்கள் நடைபெறும் . எனவே எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு இனி யோகம் மட்டும்தான்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். கொரானா காலமாக இருந்தாலும் சுயதொழிலர்களுக்கு பணவரவு தடைப்படாது.
வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.
இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.
நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். அம்மாவால் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள்.
இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.
வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
பரிகாரங்கள்
உங்களின் ஜன்ம நட்சத்திரம் அன்று திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், ஸ்ரீகாளஹஸ்தி, சீர்காழி டவுன் பாம்புக் கோவில் அல்லது அருகில் இருக்கும் நாகநாத சுவாமி, நாகேஸ்வரன் என்ற திருநாமம் கொண்ட போன்ற திருத்தலங்களுக்குச் சென்று ராகுவிற்குரிய பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்யுங்கள். குறைகள் ஒன்றும் வராது.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)