search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
    X

    விக்னேஷ் சிவன் - ரஜினி

    வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
    • இதன் தொடக்க விழாவில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நேற்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


    செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,"நிகழ்ச்சியை குறித்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி சூர்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்கள் குரலை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் வருகையினால் அந்த நிகழ்ச்சி இன்னும் அழகானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மாஸ்டர் பிருந்தா செஸ் ஒலிம்பியாட் டீசர் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து செஸ் ஒலிம்பியாட் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×