search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ்.. நிராகரித்தது ஏன்?
    X

    கீர்த்தி சுரேஷ்

    பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ்.. நிராகரித்தது ஏன்?

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
    • இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது.

    இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், "பொன்னியின் செல்வன்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.


    கீர்த்தி சுரேஷ் - திரிஷா

    அதாவது திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்திற்கு இயக்குனர் மணிரத்னம் முதலில் கீர்த்தி சுரேஷை தேர்வு செய்திருந்ததாகவும் ஆனால், அவர் நடிகர் ரஜினியின் "அண்ணாத்த" திரைப்படத்தில் நடிக்க இருந்ததால் பொன்னியின் செல்வன் வாய்ப்பினை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×