‘சந்திரமுகி 2’ கைவிடப்பட்டதா? - ராகவா லாரன்ஸ் விளக்கம்

‘சந்திரமுகி 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
Published on

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாகவும், இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்றும் கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் அதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை, அது வெறும் வதந்தி எனக் கூறியுள்ள லாரன்ஸ், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி திரைப்படம் திட்டமிட்டபடி உருவாகும் என உறுதிபடக் கூறியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com