search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கவிதை எழுதி விஜய்க்கு வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்
    X

    கீர்த்தி சுரேஷ்

    கவிதை எழுதி விஜய்க்கு வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் 48-வது பிறந்தநாள் இன்று.
    • இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    கீர்த்தி சுரேஷ்


    இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்க்கு சிறிய கவிதை எழுதி பதிவிட்டுள்ளார். அதில், பூ போல மனசு.. ஏறாத வயசு.. கோலிவுட்டின் வாரிசு.. அந்த பெயர் தளபதி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×