search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல என்னை வழிநடத்தும் எனது குருசாமி.. ஜெயராமை புகழ்ந்த ஜெயம் ரவி..
    X

    ஜெயம் ரவி

    ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல என்னை வழிநடத்தும் எனது குருசாமி.. ஜெயராமை புகழ்ந்த ஜெயம் ரவி..

    • மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
    • இந்த படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயம் ரவி நடிகர் ஜெயராமுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


    ஜெயம் ரவி - ஜெயராம்

    இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெயம் ரவி "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×