என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் விஜய்
Byமாலை மலர்14 March 2022 10:34 AM GMT (Updated: 14 March 2022 10:34 AM GMT)
பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமான ரசிகர்கள் தங்கள் பகுதியில் செயல்படவேண்டும் என்று விஜய் உத்தரவின்படி மக்கள் இயக்கத்தினர் செயல்பட்டு இருக்கிறார்கள்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பின்னடைவை சந்தித்திருந்தாலும் சோர்வடையாமல் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையை மக்கள் பணியில் ஈடுபடுவதற்கென்றே செலவழிக்க வேண்டும் என்று தீர்மானமே கொண்டுவரப்பட்டது.
இதன் படி பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமான ரசிகர்கள் தங்கள் பகுதியில் செயல்படவேண்டும் என்று புஸ்ஸி ஆனந்து அறிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தினர்
இதனை முன்னிட்டு விஜய் அவர்களின் உத்தரவின்படி, அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து அவர்களின் ஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கப் பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்குத் துணிப்பை வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X