என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை கண்கலங்க வைத்த சூர்யா
Byமாலை மலர்4 Sep 2021 11:31 AM GMT (Updated: 4 Sep 2021 1:15 PM GMT)
பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அமிதாப் பச்சன், நடிகர் சூர்யாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என புகழாரம் சூட்டி உள்ளார்.
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. சமீபத்தில் நடந்த மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.
சூரரைப்போற்று படத்தின் போஸ்டர்
இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறும் ‘கையிலே ஆகாசம்’ பாடல் வீடியோவை பார்த்தபோது தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், தன்னை மீறி கண்ணீர் விட்டதாகவும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நடிகர் சூர்யாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் எனவும் புகழாரம் சூட்டி உள்ளார். ‘கையிலே ஆகாசம்’ பாடல் பார்த்து பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சனுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X