என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிவகார்த்திகேயன் - அருண் விஜய் மோதலா?
Byமாலை மலர்3 Sep 2018 2:18 PM GMT (Updated: 3 Sep 2018 2:18 PM GMT)
நடிகர் அருண் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் வந்த பதிவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. #ArunVijay #Sivakarthikeyan #SeemaRaja
அதிரடி சண்டைகளுடன் சிவகார்த்திகேயனின் சீமராஜா டிரெய்லர் வெளிவந்துள்ளது. டிரெய்லரை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனின் சண்டையை பாராட்டி பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் "நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய பதிவு அதில் இருந்தது.
இது சிவகார்த்திகேயன் டிரெய்லரை விமர்சிக்கும் வகையில் அந்த பதிவு இருந்ததாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அருண்விஜய் இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார். அதில் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. சற்றுமுன்புதான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிறகு நேற்று ட்வீட் செய்த அவர், கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிட்டது. நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என தெரிவித்தார்.
மேலும், இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியன்றில் சிவகார்த்திகேயன், நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. யாரை பார்த்தும் பயப்படுவதும் இல்லை. எனது அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்று பரபரப்பாக பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X