என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரூ.2 கோடி கேட்கும் வடிவேலு
Byமாலை மலர்28 May 2018 12:59 PM GMT (Updated: 28 May 2018 12:59 PM GMT)
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு, மேலும் 2 கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தால் நடிக்க தயார் என்று கூறியிருக்கிறார். #Vadivelu
உலக தமிழர்களையே சிரிக்க வைக்கும் வடிவேலு தயாரிப்பாளரை கதற விடலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்லாம் இம்சை அரசன் 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் தான். வடிவேலு சிம்புதேவன் ஷங்கர் கூட்டணியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.
இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார்கள். படப்பிடிப்பு தொடங்கி 8 நாட்கள் சென்ற நிலையில் வடிவேலு படக்குழுவினரிடம் கோபம் கொண்டு படப்பிடிப்பை புறக்கணித்து விட்டார். ஆடை வடிவமைப்பாளரில் தொடங்கிய சிக்கல் வடிவேலுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. தயாரிப்பாளர் சங்கர் வடிவேலுவால் தனக்கு இழப்பான ரூ.9 கோடியை அவரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறார்.
விஷால் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தொடக்கத்தில் பிடி கொடுக்காமல் பேசிய வடிவேலு இப்போது மேலும் ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார்’ என்று கூறி இருக்கிறார். இந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்கிறது சங்கம். விரைவிலேயே வடிவேலு நடிக்க தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X