என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிக்க வந்தபோது என்னை கேலி செய்தார்கள் - டாப்சி
Byமாலை மலர்9 March 2018 7:35 AM GMT (Updated: 9 March 2018 7:35 AM GMT)
தமிழ், தெலுங்கு சினிமாவில் குறிப்பிட்ட படங்களில் நடித்து, தற்போது இந்தி சினிமாவில் நடித்து வரும் டாப்சி, தான் நடிக்க வந்தபோது பலரும் தன்னை கேலி செய்ததாக கூறியிருக்கிறார். #TaapseePannu
தமிழ், தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த டாப்சி இந்தி பட உலகுக்கு சென்றார். தற்போது அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார். வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது சினிமா அனுபவம் பற்றி டாப்சி அளித்த பேட்டி...
“நான் ஆரம்பத்தில் சினிமாவுக்கு நடிக்க வந்த போது இயக்குனர்கள் சின்னச் சின்ன காரணங்களுக்காக என்னை நிராகரித்து இருக்கிறார்கள். நீ அழகாக இல்லை. கவர்ச்சியாக இல்லை. நீ நடிகையாக லாயக்கு இல்லாதவர்கள் என்று கேலி செய்தார்கள். நீ பெரிய ஆளின் மகள் இல்லை. உன் பெயரை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்று சொல்லி அவமதித்தார்கள்.
நான் நடிக்க விருப்பப்பட்டு சினிமாவுக்கு வந்தேன். முன்பு சினிமா துறையின் செயல்பாடுகள் எனக்கு தெரியாது. இப்போது அதை தெரிந்து கொண்டிருக்கிறேன். திரை உலகில் என்மதிப்பை உயர்த்துவது எப்படி என்று யோசிக்கிறேன். ஒன்றுமே தெரியாமல் இருந்த நான் இவ்வளவு கற்றுக்கொண்டதே பெரிய விஷயம். என் தங்கையை என்னைப்போல் கஷ்டப்பட விடமாட்டேன்”. #TaapseePannu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X