search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஒரே நாளில் இரு பட அறிவிப்புகள் - உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்
    X

    ஒரே நாளில் இரு பட அறிவிப்புகள் - உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த 2 படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். #Nayanthara #Viswasam
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா' படத்திற்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கோலமாவு கோகிலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகும் `கொலையுதிர் காலம்' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. 

    இதுதவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். இன்னொரு தெலுங்கு பட வாய்ப்பும் வந்து இருக்கிறது. 



    இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அதன்படி நயன்தாரா அடுத்ததாக அஜித் ஜோடியாக `விஸ்வாசம்' படத்திலும், `லெக்‌ஷ்மி', `மா' குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் த்ரில்லர் கதையிலும் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு வருகிற 22-ஆம் தேதி ஆரம்பமாகிறது. 

    மேலும் கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள். #Nayanthara #Viswasam

    Next Story
    ×