என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சென்னையில் 18 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் ராயல் என்ஃபீல்டு
Byமாலை மலர்27 Jun 2019 9:30 AM GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாகனங்களை சுத்தம் செய்ய புதிய வழிமுறையை பின்பற்றி சென்னையில் 18 லட்சம் தண்ணீரை சேமிக்கிறது.
சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தன்பங்கிற்கு தண்ணீரை சேமிக்கும் முயற்சிகளில ஈடுபட துவங்கியுள்ளன. மோட்டார்சைக்கிள்களை சுத்தம் செய்ய தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னை முழுக்க 20 சர்வீஸ் மையங்களில் டிரை வாஷ் சிஸ்டம்களை பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு புதிய முறையை பயன்படுத்தியதில் மாதம் 18 லட்சம் தண்ணீரை சேமிக்க முடிவதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சென்னை நகர தண்ணீர் தேவை 80 கோடி லிட்டர்களாக இருககிறது. எனினும், சென்னையில் மாதம் 52.5 கோடி லிட்டர் தண்ணீர் தான் கிடைக்கிறது.
இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலிலும், வாடிக்கையாளர் சேவையை தொடர்ந்து சிறப்பாக வழங்க ராயல் என்ஃபீல்டு முதல் முறையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு பின்பற்றும் புதிய டிரை வாஷ் சிஸ்டம் மிகக்குறைந்த அளவு தண்ணீர் கொண்டு சிறப்பாக சுத்தம் செய்திட முடியும். இவ்வாறு செய்யும் போது வழக்கம்போல வாகனம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X