என் மலர்
ஆட்டோமொபைல்
- DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
- எலெக்ட்ரிக் கர்வ் மாடலை பத்து நிமிடங்களுக்குள் 100 கிலோமீட்டர்கள் வரை செல்வதற்கான சார்ஜ்-ஐ ஏற்றிவிடும்.
வருகிற 7-ந்தேதி டாடா கர்வ் EV அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக இந்த காரின் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த மாத இறுதியில் ஐசி எஞ்சின் மாடலின் விலை அறிவிப்பு வெளியிடப்படும்.
கர்வ் EV தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வரும். டாப் எண்ட் வெர்ஷனில் 55kWh பேட்டரி ஒற்றை மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வெர்ஷன் ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் தூரம் வரை செல்லும்.

குறிப்பிடத்தக்க வகையில், DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் கர்வ் மாடலை பத்து நிமிடங்களுக்குள் 100 கிலோமீட்டர்கள் வரை செல்வதற்கான சார்ஜ்-ஐ ஏற்றிவிடும்.
அம்சங்கள் பிரிவில், டாடா கர்வ் EV ஆனது பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், 360-டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகளை கொண்டிருக்கும்.
புதிய கர்வ் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ.18 முதல் 24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கர்வ் EV ஆனது பிஓய்டி அட்டோ 3, எம்ஜி ZS EV, மஹிந்திரா XUV400 மற்றும் வரவிருக்கும் கார்களான ஹூண்டாய் க்ரெட்டா EV மற்றும் ஹோண்டா எலிவேட் EV ஆகியவற்றுக்கு போட்டியாக அமையும்.
- பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர்.
- குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும்.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கூப் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பசால்ட் என்று அழைக்கப்படுகிறது. சிட்ரோயன் பசால்ட் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடல் வெளியீட்டுக்கு முன் இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 25 ஆயிரம் முன்பணம் செலுத்தி புதிய சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி-யை முன்பதிவு செய்து கொள்ளலாம். சமீபத்தில் இந்த காருக்கான டீசர்கள் வெளியிடப்பட்டன. அதில் புதிய கூப் எஸ்யுவி மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனள், 10.25 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சில்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று புதிய காரில் வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, டைப் சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 109 ஹெச்பி பவர், 215 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் பசால்ட் மாடல் டாடா கர்வ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
- குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் அறிமுகம் செய்யும் என தகவல்.
- வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஹீரோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது அந்நிறுவன தலைமை அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
என்ட்ரி லெவல் பிரிவில், குறைந்த விலை மாடல், மிட் ரேஞ்ச் மாடல் உள்ளிட்டவைகளால் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த உள்ளதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ஹீரோ நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் அறிமுகம் செய்து, அதன்பிறகு மிட் ரேஞ்ச் மாடலை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. புதிய மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் விடா வி1 பிளஸ் மாடலை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது இந்திய சந்தையில் ஓலா நிறுவனம் மட்டும்தான் குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (S1 X) விற்பனை செய்கிறது. இதைத் தொடர்ந்து பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்கள் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
ஹீரோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தற்போதுள்ள மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- 25 மாதங்களில் மைல்கல்லை எட்டிய ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை இது முறியடித்தது.
- அடுத்த 1,00,000 யூனிட்கள் வெறும் 10 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா, வேகன்ஆர் வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் கிராண்ட் விட்டாரா இணைந்துள்ளது.
மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் வெறும் 22 மாதங்களில் 2 லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது. ஜூன் 2024 இறுதிக்குள், இது 199,550 யூனிட்களை விற்றது. 2,00,000 உள்நாட்டு விற்பனையைத் தொடுவதற்குத் தேவையான 450 யூனிட்கள் ஜூலை 2024 தொடக்கத்தில் எட்டியது.
இதன் மூலம் அதிவேகமாக 2 லிட்சம் யூனிட்கள் விற்பனையான எஸ்யூவி என்ற பெருமையை கிராண்ட் விட்டாரா பெற்று இருக்கிறது. 25 மாதங்களில் மைல்கல்லை எட்டிய ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை இது முறியடித்தது.
செப்டம்பர் 19, 2023 அன்று, மாருதி கிராண்ட் விட்டாரா வெறும் 12 மாதங்களில் 1 லட்சம் யூனிட் விற்பனையானதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அடுத்த 1,00,000 யூனிட்கள் வெறும் 10 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுடன் மிகுந்த போட்டி கொண்ட நடுத்தர எஸ்யூவி சந்தையில் நுழைந்தாலும், மாருதி கிராண்ட் விட்டாரா தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
2024 நிதியாண்டில், அதன் விற்பனையானது, இது ஹூண்டாய் க்ரெட்டாவிற்குப் பிறகு (1,62,773 யூனிட்கள், 8.2 சதவீதம் அதிகரித்து) இரண்டாவது அதிகம் விற்பனையான நடுத்தர SUV ஆகும் (1,21,169 யூனிட்கள், 136 சதவீதம் அதிகம்).
- ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
- கூடுதலான இரண்டு கதவுகள் மற்றும் அதிகரித்த நீளம், வீல்பேஸ் ஆகியவற்றுடன் வடிவமைப்பில் புதுமை.
இந்தியர்களின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தார் மாடல் கார்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் 5 டோர் கொண்ட புதிய வெர்ஷனை வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த வெர்ஷனுக்கு தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) எனப் பெயர் வைத்துள்ளது.
தார் 3 டோர் வெர்ஷனை போலவே அதிக கவர்ச்சியான மற்றும் மிடுக்கான தோற்றத்தை கொண்டதாக இது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப ஆறு ஸ்லாட்டுகளைக் கொண்ட புதிய கிரில் காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமும், முன்பக்க பம்பரும் தார் ராக்ஸ்-க்கு வேற லெவல் அழகான பிம்பத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
கூடுதலான இரண்டு கதவுகள் மற்றும் அதிகரித்த நீளம், வீல்பேஸ் ஆகியவற்றுடன் தார் ராக்ஸ் வடிவமைப்பிலும் நுட்பமான புதுமைகளை பெறுகிறது.
இன்ஜினைப் பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றது. மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
- இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.
நிசான் நிறுவனம் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த எக்ஸ் டிரெயில் காரின் இந்திய வெர்ஷன் விவரங்களை தெரிவித்துள்ளது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட புது எஸ்யுவி மாடல் இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
தற்போது நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.
புதிய எக்ஸ் டிரெயில் மாடல்: பியல் வைட், டைமண்ட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கும். அளவீடுகளை பொருத்தவரை இந்த கார் 4680mm நீளம், 1840mm அகலம், 1725mm உயரம் கொண்டுள்ளது. இந்த காரின் வீல்பேஸ் 2705mm ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 210mm ஆக உள்ளது.

2024 நிசான் எக்ஸ் டிரெயில் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 12 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 160 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 13.7 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.6 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது. புதிய எக்ஸ் டிரெயில் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் மெஷின்டு அலாய் வீல்கள், முன்புற கதவில் ORVMகள், எல்இடி டெயில் லைட்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர் வழங்கப்படுகிறது.
- ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது.
- புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.
இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை எக்ஸ் ஷோரூமில் ரூ.2.39 லட்சத்தில் தொடங்குகிறது.
தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 இன் வடிவமைப்பு அதிநவீன ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டியர்டிராப் வடிவ பெட்ரோல் டேங்க் உள்ளது. இத்துடன் மெலிதான டெயில் பகுதி பெற்றுள்ளது.
சிங்கிள் பீஸ் இருக்கை மற்றும் பில்லியனுக்கு ட்யூபுலர் கிராப் ஹேண்டில் உள்ளது. மொத்தத்தில் கெரில்லா 450 அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த பைக்: ஃப்ளாஷ், டாஷ் மற்றும் அனலாக் ஆகிய மூன்றுவகை வண்ணங்களாக பிரிக்கப்படுகின்றன.
ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது. டாஷ் வேரியண்ட் கோல்ட் டிப் மற்றும் பிளேயா பிளாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதே நேரத்தில் அனலாக் கீழ் ஸ்மோக் மற்றும் பிளேயா பிளாக் கொண்டுள்ளது.

இந்த பைக்கில் 452சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 8,000ஆர்பிஎம்மில் 39.50 ஹெச்பியையும், 5,500ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பிரேக்கிங் வேலைகளை இரட்டை பிஸ்டன் காலிபருடன் முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் கவனித்துக்கொள்கிறது. பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் 270 மிமீ டிஸ்க் உள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
கெரில்லா 450 ஆனது 1440 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது, அதே சமயம் கிரவுண்ட் கிளியரன்ஸ் 169 மிமீ ஆகும். இதன் எடை 185 கிலோ ஆகும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் எல்இடி விளக்குகள் உள்ளன. புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.
இந்த பைக்கின் அனலாக் வேரியண்ட் விலை ரூ.2.39 லட்சம், மிட்-ஸ்பெக், டாஷ் வேரியன்டின் விலை ரூ.2.49 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கிறது. ஃப்ளாஷ் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமில் ரூ.2.54 லட்சத்தில் கிடைக்கும்.
இந்திய சந்தையில் இந்த பைக் டிரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- இயந்திர ரீதியாக, புதிய CNG அமைப்புடன் கூடிய எக்ஸ்டர் 1.2-லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது.
- ஒரு CNG சிலிண்டர் பொருத்துதல் போல் இல்லாமல், CNG டுயோ மாடலில் இரண்டு சிலிண்டர்கள் உள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்றே, இரட்டை CNG சிலிண்டர் டேங்க்-ஐ தனது வாகனத்தில் வழங்கியுள்ளது. இந்தியாவில் டாடா, மாருதி மற்றும் ண்டாய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் இரட்டை சிஎன்ஜி டேன்க் கொண்ட வாகனத்தை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் இதே போன்ற தொழில்நுட்பத்துடன், இரட்டை CNG-ஐ தனது எக்ஸ்டர் மாடலில் வழங்கி உள்ளது.
எக்ஸ்டர் CNG டுயோ என அழைக்கப்படும் புதிய காரின் ஆரம்ப விலை ரூ. 8.50 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் ஆகும். S, SX மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட SX நைட் ஆகிய 3 மாடல்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
இயந்திர ரீதியாக, புதிய CNG அமைப்புடன் கூடிய எக்ஸ்டர் 1.2-லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இருப்பினும், ஒரு CNG சிலிண்டர் பொருத்துதல் போல் இல்லாமல், CNG டுயோ மாடலில் இரண்டு சிலிண்டர்கள் உள்ளன. இது, 60 லிட்டர் CNG திறன் கொண்ட 27.1km/kg என்ற எரிபொருள் செயல்திறனை எக்ஸ்டர் வழங்குகிறது. புதிய சிஎன்ஜி டுயோவுடன், ஒற்றை டேங்க் எக்ஸ்டர் சிஎன்ஜி தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.
புதிய எக்ஸ்டர் CNG டுயோ குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தருண் கர்க் கூறுகையில், "ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிலையான மற்றும் புதுமையான இயக்க தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. அதிக எரிபொருள் திறன், போதிய பூட் ஸ்பேஸ் மற்றும் SUVயின் பல்துறை சலுகைகள் ஆகியவற்றுடன், எக்ஸ்டர் CNG டுயோ கார்பன் பாதிப்பை குறைக்கும்," என்று தெரிவித்தார்.
ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி டுயோ விலை விவரங்கள்:
ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ S ரூ.8,50,300
ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ SX ரூ.9,23,300
ஹூண்டாய் எக்ஸ்டர் டுயோ SX நைட் எடிஷன் ரூ.9,38,200
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.
- கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.
இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த நிலையில் ஆடி நிறுவனம் Q5 எஸ்யூவியை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து போல்ட் எடிஷன் சிரீஸை கொண்டு வர உள்ளது. Q5 இன் மாடல் ரூ.72.30 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் Q5 போல்ட் எடிஷனை ஆன்லைன் மற்றும் டீலர்களிடம் சென்று வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.
கிரில், ஆடி லோகோக்கள், ஜன்னல் சுற்றுகள், ORVMகள் மற்றும் ரூஃப்-ரெயில்கள் ஆகியவற்றில் உயர் பளபளப்பான கருப்பு பெயிண்ட் இதில் அடங்கும். மேலும், கிலேசியர் ஒயிட், நவெரா ப்ளூ, மித்தோஸ் பிளாக், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் மான்ஹட்டன் கிரே ஆகிய ஐந்து வண்ணம் விருப்பங்களில் கிடைக்கிறது.

அம்சங்களைப் பொறுத்தவரை, ஆடி Q5 ஆனது நினைவக செயல்பாடு, 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங் உதவி, ஆறு டிரைவ் மோட்கள், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 19-ஸ்பீக்கர்கள் மற்றும் ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் காக்பிட், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.
இயந்திர ரீதியாக, Q5 ஆனது 2.0-லிட்டர் TFSi பெட்ரோல் மோட்டார் மூலம் 261bhp மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதே நேரத்தில் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- பின்புறத்தில், டெயில்-லேம்ப்களில் லேசான மாற்றங்கள் இருக்கும்.
- 2025 ஆம் ஆண்டில் ஸ்கோடாவிற்கான மூன்றாவது புதிய தயாரிப்பாக ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் இருக்கும்.
பிரபலமான ஸ்கோடா ஸ்லாவியா செடான் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. ஸ்கோடாவின் மேட் ஃபார்-இந்தியா செடான் பிப்ரவரி 2022 முதல் விற்பனையில் உள்ளது.
இந்தியா 2.0 தயாரிப்புகளில் ஸ்லாவியா நான்கு மாடல்களில் ஒன்றாகும். இதில் ஸ்கோடா குஷாக் மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் எஸ்யூவிகளுடன் அதன் பேட்ஜ் பொறிக்கப்பட்ட இரட்டை ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் செடானும் அடங்கும்.
புதுப்பிக்கப்பட்ட ஸ்லாவியாவை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட குஷாக் அறிமுகம் செய்யப்படும். ஸ்கோடாவின் புதுப்பிக்கப்பட்ட செடான் முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்டைலிங் மாற்றங்களைக் கொண்டிருக்கும்.
ஹெட்லேம்ப்கள் லேசான மறுவடிவமைப்பைக் காணும், கிரில் சற்று அகலமாக இருக்கும், மேலும் குரோம் பிட்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். கூடுதலாக, ஹூண்டாய் வெர்னாவில் காணப்படுவது போன்ற கனெக்டெட் ஹெட்லேம்ப்கள் உள்ளன. பின்புறத்தில், டெயில்-லேம்ப்களில் லேசான மாற்றங்கள் இருக்கும்.
உட்புறத்தில், மாறுபாட்டைப் பொறுத்து சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் உபகரணங்களை எதிர்பார்க்கலாம்.
பவர்டிரெய்ன் விஷயத்தில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட முடியாது. அதாவது மேனுவல் மற்றும் DSG கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், மற்றும் 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இத்துடன் மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

2025 ஆம் ஆண்டில் ஸ்கோடாவிற்கான மூன்றாவது புதிய தயாரிப்பாக ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் இருக்கும். இந்த பிராண்ட் அனைத்து புதிய காம்பாக்ட் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுகத்துடன் புதிய ஆண்டைத் தொடங்கும், பின்னர் முறையே குஷாக் மற்றும் ஸ்லாவியாவிற்கான ஃபேஸ்லிஃப்ட்கள் அறிமுகம் செய்யப்படும்.
முன்னதாக, ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மிட்சைஸ் செடான் மற்றும் குஷாக் மிட்சைஸ் எஸ்யூவியின் மாடல்களின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை குறைத்தது. இத்துடன் கார் வேரியண்ட்களுக்கு புதிய பெயர்களையும் ஸ்கோடா வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரூ. 5 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
- இந்த மாடல் அதிகபட்சம் 150 கி.மீ. ரேஞ்ச் வழங்குகிறது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரான்ட், ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு புதிய நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி பயனர்கள் எவ்வித முன்பணமும் செலுத்தாமல் தனது RV400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வாங்க முடியும். இதற்கான மாத தவணை ரூ. 4 ஆயிரத்து 444 ஆகும்.
வாடிக்கையாளர்கள் தங்களது வருமான சான்று, ஸ்டாம்ப் டியூட்டி அல்லது பிராசஸிங் கட்டணம் என எதுவும் செலுத்தாமல், டிஜிட்டல் முறையில் இந்த சலுகையை பெற முடியும். இதுபற்றிய முழு விவரங்கள் அந்நிறுவன விற்பனை மையங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று ரெவோல்ட் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன் மூலம் ரெவோல்ட் நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கிறது. முன்னதாக இதேபோன்ற அறிவிப்பில் அந்நிறுவனம் தனது RV400 ஸ்டான்டர்டு மற்றும் BRZ மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரெவோல்ட் RV400 ஸ்டான்டர்டு மற்றும் BRZ மால்களில் 3 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் அதிகபட்சம் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த பைக்கில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மூன்று ரைட் மோட்கள், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளன.
- முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
- புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
யூரோ NCAP புதிய கிராஷ் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய Suzuki Swift, 2024 Dacia Duster, புதிய Skoda Kodiaq போன்ற பல கார் மாடல்களின் சோதனை முடிவுகள் அடங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட்டின் சோதனை முடிவுகள் குறித்து பார்ப்போம்...
சோதனையில், 2024 ஸ்விஃப்ட் விபத்து சோதனையில் மூன்று நட்சத்திர மதிப்பீடு பெற்றது. இதில், வயது வந்தோர் பாதுகாப்பில் 67 சதவீதமும், குழந்தைகள் பாதுகாப்பில் 65 சதவீதமும், பாதுகாப்பு உதவியில் 62 சதவீதமும், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகளுக்கு 76 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.
ஸ்விஃப்ட்டின் இந்த சோதனை செய்யப்பட்ட யூனிட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் லோட் லிமிட்டர்கள் மற்றும் சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு ஆகியவை அடங்கும். மேலும், இது இரண்டாவது வரிசையில் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் ADAS வசதிகளை கொண்டுள்ளது. முன்பக்க ஆஃப்செட் சோதனையில் காரினல் பயணிகள் அமரும் பெட்டி நிலையானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது, எனவே இந்தியாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் உடன் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ESP, HSA, பின்புற பார்க்கிங் சென்சார்கள், சீட்பெல்ட் நினைவூட்டல் அமைப்பு, வேக எச்சரிக்கை அமைப்பு, Isofix குழந்தை இருக்கை ஆங்கரேஜ் மற்றும் சில கூடுதல் அம்சங்களை இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் கொண்டுள்ளது. சுசுகி கனெக்ட் தொழில்நுட்பம். வரவிருக்கும் மாதங்களில் புதிய ஸ்விஃப்ட் BNCAP-ல் சோதிக்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விப்ட் மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
டிசைனை பொருத்தவரை 2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய பம்ப்பர்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் முன்புற கிரில், எல்.இ.டி. ஃபாக் லைட்கள், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. 2024 ஸ்விப்ட் மாடல் லஸ்டர் புளூ மற்றும் நோவல் ஆரஞ்சு என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.






