
இதையடுத்து, அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஹாரியர் எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலானது விசேஷமான கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் அறிமுகமானது. பண்டிகை காலத்திற்கு முன்னதாக வர இருக்கும் இந்த புதிய மாடலை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்படுகிறது. இதில், 17 அங்குல கருப்பு வண்ணத்திலான அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கிட் பிளேட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பேட்ஜ் மற்றும் கைப்பிடிகள் மட்டுமே க்ரோம் பூச்சுடன் இடம்பெற்றுள்ளன.
தற்போது விற்பனையில் உள்ள மாடலில் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்படுகிறது. ஆனால், டார்க் எடிசனில் கருப்பு வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும், மர அலங்கார வேலைப்பாடுகளுடன் மிகவும் பிரிமீயமாக வர இருக்கிறது. மேலும், டாப் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கிடைக்கும்.
இந்த காரில் பிரத்யேக கருப்பு வண்ணத்தை தவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. அப்போது, இந்த எஞ்சின் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றதாக மாற இருக்கிறது.
இந்த டார்க் எடிசன் தவிர்த்து, காலிஸ்ட்டோ காப்பர், தெர்மிஸ்ட்டோ கோல்டு, ஏரியல் சில்வர், டெலிஸ்டோ க்ரே, ஆர்கஸ் ஒயிட் மற்றும் இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.16.76 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.