என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மேஷம்
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். சகாய ஸ்தான அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பம் அமையும். மன சஞ்சலம் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். பழைய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடப்பெயர்ச்சி உண்டாகும்.
சிலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். 9,12-ம் அதிபதி குரு வக்ரம் பெறுவதால் வீண் விரயங்களும் வைத்தியச் செலவும் குறையும். சிலருக்கு தந்தையுடன் சிறு மன பேதம் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து மற்றும் பாகப்பிரிவினை தொடர்பான முக்கிய ஆவணங்கள் எழுத ஏற்ற காலம்.
புதிய திட்டங்களில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங் களைப் புகுத்தி ஆதாயம் காண்பர். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
6.8.2022 பகல் 12.062022 முதல் 8.8.2022 பகல் 2.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் எதிர்காலம் பற்றிய கற்பனை பயம் அதிகரிக்கும். சஷ்டி திதியில் முருகனுக்கு பால் அபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்