இந்தியா
உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடாத தலித் வாலிபரை தாக்கும் வீடியோ- ராகுல் காந்தி வெளியிட்டு கடும் கண்டனம்
டெல்லி
இந்தியா

உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடாத தலித் வாலிபரை தாக்கும் வீடியோ- ராகுல் காந்தி வெளியிட்டு கடும் கண்டனம்

Maalaimalar

  • மக்கள் எழுந்து நின்று அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும்.
  • குடிமக்கள் முன் வராவிட்டால் பரேலியில் நடந்தது போல உரிமைகள் பறிக்கப்பட்டு சுயமரியாதை நசுக்கப்படும்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இங்குள்ள பரேலி தொகுதியில் கடந்த 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இந்த தொகுதியில் தலித் வாலிபர் ஒருவர் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடாமல் இருந்ததாக கூறி கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதாவினர் அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.யும், ரேபரேலி தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி இது தொடர்பாக பா.ஜனதாவை கடுமையாக சாடியுள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இருக்கிறோம். இது வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கோபமாகவும் உணர்ந்தோம். எங்கள் நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது.

பா.ஜனதா அரசு அரசியலமைப்பு உரிமைகளை அழிக்கிறது. காவி கட்சி அரசியல் அமைப்பை மாற்ற விரும்புகிறது. இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது.

மக்கள் எழுந்து நின்று அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும். குடிமக்கள் முன் வராவிட்டால் பரேலியில் நடந்தது போல உரிமைகள் பறிக்கப்பட்டு சுயமரியாதை நசுக்கப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில் கூறி இருப்பதாவது:-

பா.ஜனதா பொய்களின் தொழிற்சாலையாகும். நான் மீண்டும் சொல்கிறேன். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நரேந்திரமோடி பிரதமராக முடியாது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புயல் வீசுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடையவை