கடையில் வாங்காமல் வீட்டிலேயே எளிமையான முறையில் ஐஸ்கிரீம் தயாரிக்கலாம். செலவும் குறைவு..நுங்குகளை தோல் நீக்கி, தேவைக்கு ஏற்ப பால், சர்க்கரை, எசன்ஸ் இவற்றை கலந்து மிக்சியில் அரைக்கவும்..அரைத்த கலவையை சிறிய டப்பாக்களில் ஊற்றி பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்தால், ஐஸ்கிரீம் ரெடி.மில்க் பிரெட் அல்லது ரஸ்க்கை பொடித்து, சுண்டக்காய்ச்சிய பாலில் கலந்து, சர்க்கரை எசன்ஸ் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்..சிறிது நேரம் கழித்து அந்த கலவையை பிரீசரில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான ஐஸ்கிரீம் தயார்..ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்துவிட்டால் சளி பிடிக்காது, தொண்டை கட்டாது.