Maalaimalar
குழந்தையின் முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே முழுமையான மற்றும் போதுமான உணவாகும்.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் தாய்ப்பால் மிகவும் அவசியமாகிறது.
தாய்ப்பால் குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து போல செயல்படுகிறது.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கும் மஞ்சள் நிற சீம்பாவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாயின் உடலில் ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி அழுத்தத்தை குறைக்கிறது.
தாய்ப்பால் பிரசவத்திற்குப் பிறகு கருப்பை விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகிறது.
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை தாய்ப்பால் கட்டுப்படுத்துகிறது.
தாய்ப்பால் என்பது குழந்தையில் பசியைத் தீர்க்கும் உணவு மட்டுமல்ல ஆரோக்கியமான வாழ்வின் வலுவான அடித்தளமாகும்.
தாய்ப்பாலிற்கு ஈடுஇணையான உணவு உலகில் எதுமில்லை.