கோடை காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உட்கொள்ள வேண்டியவை!
undefined
இரவில் மீதமான சோற்றில் நீர் ஊற்றி வைத்து காலையில் நீரை வடித்து அத்துடன் சிறிது பழைய சாதத்தையும் சேர்த்து நன்கு மசித்து உப்பு, மோர், சின்ன வெங்காயம் சேர்த்து பருக உடலுக்கு குளிர்ச்சி தரும்.
கீரை, முட்டைகோஸ், லெட்யூஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் அதிக நீர்சத்துக் கொண்டவை. இவை நம்மை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். சாலட்கள், ஸ்மூத்திகள், ஜூஸ் என செய்து சாப்பிட உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
சாதாரண தண்ணீருக்கு பதிலாக சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டிய தண்ணீரைப் பருகலாம். அதேபோல் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தை 1 கப் நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அந்த நீரைப் பருகிவர உடல் குளிர்ச்சி பெறும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது. அதிக கலோரிகளற்ற பொட்டாசியம் சத்து நிறைந்தது.
வியர்வை மூலம் இழக்கும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப உதவுகின்றன. சாலட்கள், ஸ்மூத்திகளில் கலந்து, எலுமிச்சை இஞ்சியுடன் சேர்த்து வெள்ளரி ஜூஸாகவும் பருகலாம்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்--->
https://www.maalaimalar.com/web-stories