அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை பாம்புகள்...

Maalaimalar

செம்மண் மண்ணுளிப் பாம்பு

இந்தியாவின் வறண்ட பகுதிகளில் காணப்படும். இதன் வால் பகுதி தலை போன்றே தடிமனாக இருக்கும். மருத்துவகுணம் நிறைந்தது.

சோலைக்கிளி பாம்பு

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை பகுதியில் காணப்படும்.

திருவிதாங்கூர் மலை முள்வால் பாம்பு

தென் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை மற்றும் காபி தோட்டங்கள்உருவாக்கப்படுவதால் இதன் வாழ்விடம் முற்றிலும் சுருங்கிவிட்டது.

ஆண்டிகுவான் ரேசர்

கரீபியன் தீவுகளில் காணப்படும். கீரிகள் வேட்டையாடியதால் முற்றிலும் அழிந்து வரும் நிலையில் உள்ளது.

ஆல்பானி ஆடர்

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் பகுதிகளில் காணப்படும். இது சிறிய மற்றும் மிகவும் அரிய வகை நச்சுப் பாம்பாகும்.

மடகாஸ்கர் தரை போவா

காடழிப்பு மற்றும் சர்வதேச விலங்கு வர்த்தகம் காரணமாக மடகாஸ்கர் தீவில் வாழும் இந்த அழகான போவா வகை பாம்புகள் அழியும் சூழலில் உள்ளன