'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை - பார்த்திபன் புகார்

Santhya

சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அப்படி ஒரு பதிவை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை .
பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.
நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…" என பதிவிட்டுள்ளார்.