எழுத்தாளர் ஜெயமோகனின் "துணைவன்" என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர், "பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை.இதன் காரணமாக செயற்கை பனிப்பொழிவை உருவாக்கி படமாக்கினோம். இதனால் தான் விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது," என்று தெரிவித்தார்.