அவல் -1 கப் பொட்டுக்கடலை - 1 கப் முந்திரி - 6 திராட்சை - 6 ஏலக்காய்ப்பொடி பால் - அரை கப் சர்க்கரை - 1 கப் நெய் தேங்காய்துருவல் - 2 கப்.அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்..வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்..அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்..வறுத்த முந்திரியை மேல் தெரிவதுபோல் வைத்து லட்டு பிடித்துக்கொள்ளலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.