ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபைபர் சேவைக்கு வாடிக்கையாளர்கள் மற்றொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து
பதிவு: அக்டோபர் 19, 2019 12:29
ஜியோஃபைபர்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோஃபைபர் சேவைகள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோஃபைபர் சேவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. ஜியோஃபைபர் சேவையுடன் அதற்கான கட்டண விவரங்களையும் ரிலையன்ஸ் அறிவித்தது.
இத்துடன் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரிலையன்ஸ் ஜியோஃபைபர் அறிமுக சலுகை வழங்கப்பட்டது. சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும் முன்பே ஜியோஃபைபர் சேவைக்கான சோதனை துவங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க இயலாது என கூறப்படுகிறது. தற்சமயம் ஜியோ தனது ஜியோஃபைபர் சேவைக்கான கட்டண முறைகளை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
இதற்கான பணிகள் முழுமை பெற இன்னும் சிலகாலம் ஆகும் என்பதோடு, இதுபற்றி ஜியோ தனது விற்பனை மற்றும் விளளம்பர பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன்பின்னரே ஹோம் பிராட்பேண்ட் சேவையை சரியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியும்.
ஜியோஃபைபர் சலுகைகள் ரூ. 699 எனும் மாத கட்டணத்தில் துவங்கி அதிகபட்சமாக மாதம் ரூ. 8,499 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இணைய வேகம் 100Mbps இல் துவங்கி 1 Gbps வரை கிடைக்கிறது. இத்துடன் ஒவ்வொரு சலுகையிலும் தனிப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
Related Tags :