பராபவ ஆண்டு, வைகாசி-26 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி இரவு 9.40 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 5.02 வரை ரேவதி
யோகம் : அமிர்த / சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
மேஷம் - ஆதரவு
ரிஷபம் - லாபம்
மிதுனம் - கண்ணியம்
கடகம் - தாமதம்
சிம்மம் - வரவு
கன்னி - சிறப்பு
துலாம் - ஜெயம்
விருச்சிகம் - நற்சொல்
தனுசு - முயற்சி
மகரம் - அமைதி
கும்பம் - சுகம்
மீனம் - சுபம்