உலகம்
அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் மேலும் 9 மந்திரிகள் பதவியேற்பு

Published On 2022-05-20 18:25 GMT   |   Update On 2022-05-20 18:25 GMT
இலங்கை மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, பொருளாதார நிலையை சீர்செய்ய 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என குறிப்பிட்டார்.
கொழும்பு:

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்க பதவியேற்றார். அவரை தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் 4 புதிய மந்திரிகளாக ஏற்கனவே பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் புதிய மந்திரிகள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 

துறைமுகங்கள், கடற்துறை மற்றும் விமான சேவைகள் - நிமல் சிறிபால டி சில்வா 

கல்வித்துறை மந்திரி - சுசில் பிரேமஜயந்த 

சுகாதாரத்துறை மந்திரி  - கெஹெலிய ரம்புக்வெல

நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் மந்திரி - விஜேதாஸ ராஜபக்ஸ

சுற்றுலாத்துறை மற்றும் காணி மந்திரி - ஹரின் பெர்ணான்டோ

பெருந்தோட்டத்துறை மந்திரி - ரமேஷ் பத்திரண

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மந்திரி - மனுஷ நாணயக்கார

வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மந்திரி - நலின் பெர்ணான்டோ

பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி - டிரான் அலஸ்

Tags:    

Similar News