உலகம்
துப்பாக்கி சூடு

ரஷியாவில் அரசு அலுவலகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி

Published On 2021-12-08 07:00 GMT   |   Update On 2021-12-08 07:00 GMT
ரஷியாவில் அரசு அலுவலகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் மற்றும் பாதுகாப்பு வீரர் உயிரிழந்தனர்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். சிறுமி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து நகர துணை மேயர் அனஸ்டசியா ரகோலா கூறும்போது, அரசு அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஊழியர் மற்றும் பாதுகாப்பு வீரர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார். துப்பாக்கி சூட்டை நடத்தியவர் மாஸ்கோவை சேர்ந்த 45 வயது நபர் என்று தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News