உலகம்
விபத்தில் சிக்கிய பஸ்

கென்யாவில் சோகம் - திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 31 பேர் பலி

Published On 2021-12-05 22:29 GMT   |   Update On 2021-12-05 22:29 GMT
கென்யாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பஸ் விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நைரோபி:

கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

இந்நிலையில், தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் ஒரு பஸ்சில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.

அங்கு கிடுய் கவுண்டியில் உள்ள என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக ஓடிய வெள்ள நீரை பஸ் கடந்து செல்ல முயற்சித்தது. அப்போது அந்த பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 31 பேர் பலியானதாக கூறுகின்றன. அவர்களில் 4 பேர் குழந்தைகள். 12 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அந்த மாகாண கவர்னர் நகிலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News