செய்திகள்
கொரோனா வைரஸ்

அதிகரிக்கும் தொற்று - இங்கிலாந்தில் ஒரே நாளில் 44,917 பேருக்கு கொரோனா

Published On 2021-11-22 18:46 GMT   |   Update On 2021-11-22 18:46 GMT
பல வளர்ந்த நாடுகளில் கொரோனா வைரசின் வீரியம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முக்கிய இடம் பெற்றுள்ளது.
லண்டன் :

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது.

அதேநேரம் பல வளர்ந்த நாடுகளிலேயே கொரோனாவின் வீரியம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முக்கிய இடம் பெற்று இருக்கிறது.
 
இந்நிலையில், இங்கிலாந்தில் நேற்று 44,917 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்து 89 ஆயிரத்து 926 ஆக உயர்ந்திருக்கிறது.

இதைப்போல கொரோனாவால் மேலும் 45 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,43,972 ஆக உயர்த்தி இருக்கிறது. நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News