செய்திகள்
தீ விபத்து

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் பலி

Published On 2021-10-22 11:00 GMT   |   Update On 2021-10-22 11:00 GMT
தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய விசாரணைக்குழுவினர் சென்றுள்ளனர்.
மாஸ்கோ:

ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெஸ்னோய் கிராமத்தில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து  ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை. ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய விசாரணைக்குழுவினர் சென்றுள்ளனர். 
Tags:    

Similar News