செய்திகள்
கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலி

Published On 2021-10-22 09:59 GMT   |   Update On 2021-10-22 09:59 GMT
உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  தியோடர் அதானம் தெரிவித்துள்ளார்.

எனவே உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். பணக்கார நாடுகள், ஏழை நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News