செய்திகள்
கந்தகார் மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு: 30-க்கும் மேற்பட்டோர் பலி
வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக மசூதியில் ஏராளமானோர் கூடியிருந்தபோது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். இதை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 70 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை.
கடந்த 8-ந்தேதி வடக்கு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.