செய்திகள்
பாகிஸ்தானில் துணிகரம் - பெட்ரோல் பம்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
லாகூர்:
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கடந்த மாதம் ராவல்பிண்டி நகரில் நடந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படியுங்கள்...பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு