செய்திகள்
பிரதமர் மோடி

அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்: பிரதமர் மோடி 25-ந்தேதி ஐ.நா.சபையில் பேசுகிறார்

Published On 2021-09-14 08:20 GMT   |   Update On 2021-09-14 11:19 GMT
ஐ.நா. பொதுசபையின் 76-வது அமர்வு நியூயார்க் நகரில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
நியூயார்க்:

பிரதமர் மோடி
அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. கடந்த மார்ச் மாதம் ‘குவாட்’ மாநாடு காணொலி காட்சி மூலம் நடந்தது.

தற்போது தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. வாஷிங்டனில் நடத்தும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ம் மோரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

குவாட் மாநாட்டில் கொரோனா வைரஸ், தடுப்பூசி, பருவநிலை மாற்றம், இந்தோ- பசிபிக் நிலவரம், பாதுகாப்பு உள்பட பல வி‌ஷயங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

மறுநாள் 25-ந்தேதி ஐ.நா.சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

ஐ.நா. பொதுசபையின் 76-வது அமர்வு நியூயார்க் நகரில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

பிரதமர் மோடி 25-ந்தேதி ஐ.நா.பொதுசபையில் பேசுகிறார்.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவின் வாஷிங்டனில் 24-ந்தேதி நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார்.



அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷி ஹைட் சுகா ஆகியோருடன் பங்கேற்கிறார்.

இதில் மார்ச் 12-ந்தேதி காணொலி மூலம் நடந்த குவாட் மாநாட்டில் இருந்து ஏற்பட்ட முன்னேற்றத்தை ஆய்வு செய்வார்கள். மேலும் பிராந்திய பிரச்சனைகள் பற்றி விவாதிப்பார்கள். அந்த மாநாட்டில் குவாட் தடுப்பூசி திட்டத்தை மதிப்பாய்வு செய்வார்கள். முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், உள் கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம், கல்வி போன்ற உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும், தலைவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News