செய்திகள்
கொரோனா வைரஸ்

அதிரும் பிரேசில் - 2 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Published On 2021-08-03 22:08 GMT   |   Update On 2021-08-03 22:08 GMT
பிரேசிலில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலியா:

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத்தொடர்ந்து 3-வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. 
 
இந்நிலையில், பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது.

அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.58 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் தொடக்கத்திலேயே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News