செய்திகள்
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெரு மற்றும் தெற்கு ஈகுவடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
நியூயார்க்:
பெரு நாட்டின் சுல்லானா நகருக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 33.18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
எனினும், சிறிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன என கூறப்படுகிறது. நிலநடுக்க அதிர்வால் பெரு நாட்டு மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் சில கீழே விழுந்துள்ளன.