செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இன்று மாலை 4 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலவுகோலில் 4.3 எனப்பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து சுமார் 188 கி.மீ தொலைவில் , 160 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.