செய்திகள்
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 30-வது இடத்தில் உள்ளது.
இஸ்லாமாபாத்:
அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1,425 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
அதேபோல், நேற்று 11 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 9.23 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.