செய்திகள்
கோப்புப்படம்

அமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5¾ லட்சத்தை கடந்தது

Published On 2021-06-13 04:02 GMT   |   Update On 2021-06-13 04:02 GMT
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி:

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட 2 லட்சத்து 49 ஆயிரத்து 746 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 96 ஆயிரத்து 17 ஆக உயர்ந்தது. அமீரகத்தில் இதுவரை 5 கோடியே 31 லட்சத்துக்கு அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 94 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,724 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 5 பேர் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News