செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொலம்பியாவை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது

Published On 2021-05-10 20:08 GMT   |   Update On 2021-05-10 20:08 GMT
கொலம்பியாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தை நெருங்குகிறது.
கொலம்பியா:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
 
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 12-வது இடத்தில் உள்ளது

இந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30  லட்சத்தைக் கடந்துள்ளது.
 
அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 854 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 28 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News