செய்திகள்
சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

துருக்கியில் 50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Published On 2021-05-08 19:26 GMT   |   Update On 2021-05-08 19:26 GMT
துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 281 பேர் பலியாகியுள்ளனர்.
அங்காரா:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
 
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் துருக்கி தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 052 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்து 16 ஆயிரத்து 141 ஆக உள்ளது.
 
ஒரே நாளில் 281 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 46.91 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 2.82 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News