செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

அமீரகத்தில் ஒரே நாளில் 2,081 பேருக்கு கொரோனா

Published On 2021-04-23 02:49 GMT   |   Update On 2021-04-23 02:49 GMT
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி:

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 232 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 4 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,842 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,565 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16 ஆயிரத்து 387 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக அமீரகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், நேற்று இந்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News