செய்திகள்
அமெரிக்கா

இந்தியா- சீனா எல்லை பிரச்சனையில் அமைதியான தீர்வுக்கு ஆதரவு: அமெரிக்கா

Published On 2021-02-10 03:55 GMT   |   Update On 2021-02-10 03:55 GMT
அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் செயல்பாடுகளுக்கு கவலை தெரிவித்த அமெரிக்கா, இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் அமைதியான தீர்வுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எப்போதும்,  எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் நிற்போம். இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அறிவோம்.  நேரடி பேச்சுவார்த்தைக்கும் அமைதியான தீர்வு முறைக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” என்றார்.
Tags:    

Similar News