செய்திகள்
கோப்புப்படம்

அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி

Published On 2021-01-23 04:16 GMT   |   Update On 2021-01-23 04:16 GMT
அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்துள்ளது.
அபுதாபி:

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 694 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 945 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 26 ஆயிரத்து 767 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து 11-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News