செய்திகள்
பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது.
பாரிஸ்:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு ஒரே நாளில் 425-க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 72,647 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.