செய்திகள்
கோப்பு படம்

20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி - திணறும் உலக நாடுகள்

Published On 2021-01-18 01:06 GMT   |   Update On 2021-01-18 01:06 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 219 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 990 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 ஆயிரத்து 804 பேரும்,  மெக்சிகோவில் 1 ஆயிரத்து 219 பேரும், இங்கிலாந்தில் 671 பேரும், பிரேசிலில் 518 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.  

தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 217 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 6 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 38 ஆயிரத்து 920 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 4,07,160
பிரேசில் - 2,09,868
இந்தியா - 1,52,274
மெக்சிகோ - 1,40,241
இங்கிலாந்து - 89,261
இத்தாலி - 82,177
பிரான்ஸ் - 70,283
ரஷியா - 65,566
Tags:    

Similar News