செய்திகள்
கொரோனா பரிசோதனை

அதிரும் அமெரிக்கா - மூன்றாவது நாளாக 2 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Published On 2020-12-06 00:50 GMT   |   Update On 2020-12-06 00:50 GMT
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியை நெருங்குகிறது.

கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை மூன்றாவது நாளாக 2 லட்சத்தைக் கடந்துள்ளது.  இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1.50 கோடியை நெருங்குகிறது.

மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அஅங்கு கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 59 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News